AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் அவதி

Chennai Beach-Tambaram Suburban Train Services: சென்னை எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்தினால் பயணிகள் அடையும் சிரமத்திற்கு வருந்துவதாகவும், மாற்று ஏற்பாடுகளை கவனிக்குமாறும் ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் அவதி
மின்சார ரயில்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Apr 2026 12:30 PM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடற்கரை – தாம்பரம் இடையிலான 5-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இருந்து இரவு நேரத்தில் கடற்கரைக்கு வரும் 3 முக்கிய ரயில்களும் 05 ஏப்ரல் நாளை இயங்காது. செங்கல்பட்டு மற்றும் திருமால்பூரில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். 04 ஏப்ரல் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலை மற்றும் இரவு நேர ரயில்கள் பாதிக்கப்படும். கூடுவாஞ்சேரியில் இருந்து வரும் ரயில்களும் தாம்பரம் – கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயண நேரத்தை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் புதிய மேற்கூரை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் கட்டுமானப் பணிகள் காரணமாக, பாதுகாப்பு கருதி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையிலான குறிப்பிட்ட மின்சார ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வார இறுதி மற்றும் வரும் வாரத்தின் தொடக்க நாட்களில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் உட்பட வட தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட்!!

ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகளில் மாற்றம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு அதிகாலை 4.15 மணி மற்றும் இரவு நேரங்களான 11.00, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்பட வேண்டிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இரவு 10.20, 11.00 மற்றும் 11.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர, செங்கல்பட்டு மற்றும் திருமால்பூரில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்; தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வார நாட்களில் தொடரும் பகுதிநேர ரத்து

இன்று (சனிக்கிழமை) மற்றும் வரும் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05 முதல் 11.59 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ஏப்ரல் 8-ம் தேதி வரை அதிகாலை நேரத்து செங்கல்பட்டு ரயில்கள் கடற்கரை – தாம்பரம் இடையே ஓடாது. கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டில் இருந்து இரவு நேரங்களில் சென்னை கடற்கரை நோக்கி வரும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்துடன் தங்களின் சேவையை முடித்துக் கொள்ளும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Follow Us