AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7 பவுன் நகைக்காகக் கொடூரம்.. மூதாட்டியைக் கொன்று குட்டையில் வீசிய பக்கத்து வீட்டு இளைஞர்!!

குற்றவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் வெள்ளவேடு பகுதிக்குச் சென்று குட்டையில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் தீபன் சக்கரவர்த்தியைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

7 பவுன் நகைக்காகக் கொடூரம்.. மூதாட்டியைக் கொன்று குட்டையில் வீசிய பக்கத்து வீட்டு இளைஞர்!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 May 2026 09:26 AM IST

செங்கல்பட்டு, மே 08: செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி ஒருவரைப் படுகொலை செய்து, அவரது உடலைத் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள குட்டையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்தீஸ்வரர் காலனி, 3-வது தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (63). இவர் கடந்த மாதம் 27ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், பயந்து போன அவரது உறவினர் திலீபன் என்பவர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க: அதிக வட்டி தருவதாகக் கூறி கைவரிசை.. 800க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி.. தலைமறைவான பெண் கைது!!

துப்பு துலக்கிய சிசிடிவி காட்சிகள்:

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சரஸ்வதி வசித்த பகுதி மற்றும் அவர் சென்ற வழிகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சரஸ்வதி கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த முக்கியத் தடயங்கள் போலீசாருக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில், மூதாட்டியின் வீட்டின் அருகிலேயே வசித்து வந்த கொடைக்கானலைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (27) என்பவரைப் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய இடத்தில் வைத்துத் தீவிரமாக விசாரித்தனர்.

நகைக்காக அரங்கேறிய கொடூரக் கொலை:

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தீபன் சக்கரவர்த்தி உண்மையை ஒப்புக்கொண்டார். சரஸ்வதி அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளைத் திருடும் நோக்கில், அவரும் நந்தீஸ்வரர் காலனியைச் சேர்ந்த வினோத்குமார் (35) என்பவரும் சேர்ந்து மூதாட்டியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். கொலை செய்த பின்னர், குற்றத்தை மறைப்பதற்காக மூதாட்டியின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று, திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை ஓரத்தில் இருந்த ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத குட்டையில் வீசியதாகத் தெரிவித்தார்.

உடல் மீட்பு மற்றும் கைது நடவடிக்கை:

குற்றவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் வெள்ளவேடு பகுதிக்குச் சென்று குட்டையில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி சரஸ்வதியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீபன் சக்கரவர்த்தியைப் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வினோத்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: மகன் மரணத்தில் நாடகம்.. போலீசாரையே குழப்பிய தாய்.. கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிக்கினார்!

முதியவர்களை குறிவைத்து குற்றம்:

சமீபகாலமாகத் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மூதாட்டி சரஸ்வதிக்கு அறிமுகமானவர்களே இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது நந்திவரம் – கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us