AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலையில் பரபரப்பு: அண்ணாமலையார் கோயிலில் ஆந்திரா – கர்நாடகா பக்தர்களிடையே மோதல்

Annamalaiar Temple Clash: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2025 ஜூன் 1 அன்று பக்தர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில பக்தர்கள் இடையே வரிசையில் முன்னுரிமைக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் பரபரப்பு: அண்ணாமலையார் கோயிலில் ஆந்திரா – கர்நாடகா பக்தர்களிடையே மோதல்
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே மோதல்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 02 Jun 2025 09:58 AM IST

திருவண்ணாமலை ஜூன் 02: அண்ணாமலையார் கோயில் (Arunachaleswarar Temple) என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது பஞ்சபூத ஸ்தலங்களில் “அக்னி” ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு வருடத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். இது தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2025 ஜூன் 1 ஆம் தேதி பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வரிசையில் யார் முன்னிலை பெறுவது என வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரின் மண்டை உடைந்து காயமடைந்தார். காயமடைந்தவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மத்தியில் திடீர் மோதல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மத்தியில் திடீர் மோதல் ஏற்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் நாள்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவது வழக்கமாகும்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதுடன், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் ராஜகோபுர நுழைவாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இருமாநில பக்தர்கள் இடையே மோதல்

இந்த தருணத்தில், வரிசையில் முன்னால் செல்ல முயன்றதை ஒட்டி தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலருக்கும், கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு குழுவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மிக விரைவாக கைகலப்பாக மாறியது.

ஒருவர் மற்றவரை சரமாரியாக தாக்கியதில், ஒருவரின் மண்டை பகுதி உடைந்து காயம் ஏற்பட்டது. காயமடைந்தவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு

சம்பவத்தால் கோயில் வளாகத்தில் கடும் பதற்றம்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில பக்தர்கள் இடையே வரிசையில் முன்னுரிமைக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. காயமடைந்தவர் மருத்துவமனை அனுப்பப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் கோயில் வளாகத்தில் கடும் பதற்றத்தை உருவாக்கியது. மோதலுக்கான காரணமாக, “வரிசையில் யார் முன்னிலை பெற வேண்டும்?” என்ற விரிசலான காரணமே கூறப்படுகிறது. தற்போது போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us