AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நட்புடன் உங்களோடு.. மாணவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..

மாணவர்களின் மன உறுதியையும் மனநலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு நட்புடன் உங்களோடு திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

நட்புடன் உங்களோடு.. மாணவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 May 2026 20:48 PM IST

மே 1, 2026: மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு NEET வருகிற மே 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு, மாணவர்களுக்கு அதிகமான போட்டியும் மன அழுத்தமும் ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் பலரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக அதிக நேரமும் முயற்சியும் செலவழித்து தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் இந்த அழுத்தம், மன உளைச்சலாக மாறும் அபாயமும் உள்ளது.

நட்புடன் உங்களோடு திட்டம்:

இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் மன உறுதியையும் மனநலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு நட்புடன் உங்களோடு திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “NEET தேர்வு நடைபெறும் சூழலில், மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காக ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மேலும் முக்கிய அம்சங்கள்:

  • தேர்வு முன் பதட்டம், பயம், நெருக்கடி போன்றவற்றை சமாளிக்க வழிகாட்டல் வழங்கப்படுகிறது.
  • பெற்றோர்களுக்கு, குழந்தைகளை எவ்வாறு ஆதரிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
  • தற்கொலை எண்ணங்கள் அல்லது தீவிர மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு உடனடி உதவி கிடைக்கிறது.
  • மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான மற்றும் ரகசியமான சூழல் வழங்கப்படுகிறது.
  • தேர்வு முடிந்த பிறகும் தேவையெனில் தொடர்ந்து ஆலோசனை பெறலாம்.

மாணவர்கள் மனநலத்தை பாதுகாத்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Follow Us