AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..

“எனது தலைமையிலான அதிமுக அரசு 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 May 2026 11:35 AM IST

மே 26, 2026: விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “குதிரை பேரம் அரசியலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த பயிர் கடன் தள்ளுபடி திட்டம் “விஞ்ஞான ஏமாற்று வேலை” என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம் என்ற கதையாக பொய்க்கால் குதிரை அரசு செயல்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு, குதிரை பேரம் போன்ற கேவலமான அரசியலை நடத்தி வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை:

மேலும், “எனது தலைமையிலான அதிமுக அரசு 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்.. தவெக நிர்வாகி பதவி பறிப்பு.. கட்சி தலைமை அதிரடி!

அவர் மேலும், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது நில அளவை கணக்கில் கொள்ளாமல் கடன் தொகையை அடிப்படையாக வைத்து தள்ளுபடி அறிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு நாங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்த நிலையில், தற்போதைய அரசு ரூ.2,044 கோடி மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுகிறது. இதன் மூலம் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது விவசாயிகளுக்கே புரியும்” என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம்:

மேலும், “விவசாயிகளை ஏமாற்றும் எந்த அரசும் நீண்ட காலம் நிலைக்காது. சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவர். அவர்களை ஏமாற்றாமல் செயல்படுங்கள்” என்றும் விஜய் தலைமையிலான அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழக முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.40 ஆயிரம், ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரம், ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us