Prithvi Shaw: கிரிக்கெட் வாழ்க்கையை இதனால்தான் இழந்தேன்.. தவறுகளை ஒப்புக்கொண்ட பிரித்வி ஷா!

Prithvi Shaw Interview: பிரித்வி ஷா, 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். கிரிக்கெட்டுக்குக் குறைவான நேரம் ஒதுக்கியதையும், தவறான நட்பு வட்டத்தால் திசைதிருப்பப்பட்டதையும் ஒப்புக்கொண்டார். மும்பை இந்தியன்ஸில் மீண்டும் விளையாட ஆசைப்படுவதாகவும், தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Prithvi Shaw: கிரிக்கெட் வாழ்க்கையை இதனால்தான் இழந்தேன்.. தவறுகளை ஒப்புக்கொண்ட பிரித்வி ஷா!

பிரித்வி ஷா

Published: 

26 Jun 2025 08:23 AM

இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பிருத்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கை பின்னடைவுக்கு பிறகு, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை தொடர்பாக மனம் திறந்து பேசினார். கடைசியாக கடந்த 2024 ஐபிஎல் சீசனில் விளையாடிய பிரித்வி ஷா (Prithvi Shaw) , சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 ஐபிஎல் (IPL 2025) ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. மேலும், வருகின்ற 2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பிரித்வி ஷா விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுகளை ஒப்புக்கொண்ட பிரித்வி ஷா:

நியூஸ் 24 உடனான உரையாடலில் பேசிய பிரித்வி ஷா, “கிரிக்கெட்டில் நிறைய விஷயங்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை மக்கள் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் எனது வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். அதில், கிரிக்கெட்டுக்கு குறைவான நேரத்தையே கொடுப்பதும் ஒன்று. முன்பெல்லாம், நான் நிறைய நேரம் பயிற்சி மேற்கொண்டேன். அப்போது, பேட்டிங் செய்வதில் எனக்கு ஒருபோதும் சோர்வு ஏற்படவில்லை. அதன்பிறகு, கவனச்சிதறல் இருந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பிரித்வி ஷா விளக்கம்:

பயிற்சி மேற்கொள்வதை தேவையில்லாத அவசியமாக கருத ஆரம்பித்தேன். எனக்கு சில தவறான நண்பர்கள் கிடைத்தார்கள். ஏனென்றால் நான் அப்போது உச்சத்தில் இருந்தேன். நட்பும் உருவாகிறது. பின்னர் அவர்கள் என்னை இங்கும் அங்கும் அழைத்து சென்றனர். அதெல்லாம், பின்னர் நான் பந்தய பாதையிலிருந்து விலகிவிட்டேன். நான் ஸ்டேடியத்தில் 8 மணிநேரம் பயிற்சி செய்தேன். அப்போது 4 மணிநேரம் ஆகிறது.” என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரித்வி ஷா:

மத்திய பிரதேச அணிக்கு எதிரான முஷ்டாக் அலி டி20 கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரித்வி ஷா கடைசியாக மும்பை அணிக்காக விளையாடினார். இந்த சீசனின்போது பிருத்வியின் உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் மும்பை நிர்வாகிகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில், பிரித்வி ஷா வேறு மாநில கிரிக்கெட் சங்கத்தில் விளையாட மும்பை கிரிக்கெட் சங்கத்திடமிருந்து (MCA) தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்றுள்ளார். இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அபய் ஹடப் கூறுகையில், “பிரித்வி ஷா ஒரு திறமைசாலி. மும்பை கிரிக்கெட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம், மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்” என்றார்.