AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SA 2nd ODI: ரிஷப் பண்டிற்கு ராய்ப்பூரில் வாய்ப்பு கிடைக்குமா? இந்திய பிளேயின் 11 எப்படி?

IND vs SA 2nd ODI Playing-11: இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், அவரது இடம் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. முதல் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்த ருதுராஜ் கெய்க்வாட் ஜோபிக்கவில்லை.

IND vs SA 2nd ODI: ரிஷப் பண்டிற்கு ராய்ப்பூரில் வாய்ப்பு கிடைக்குமா? இந்திய பிளேயின் 11 எப்படி?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2025 20:48 PM IST

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa) இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நாளை அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி உள்ளது. அதன்படி, இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் எத்தகைய இந்திய அணி எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே 2வது ஒருநாள் போட்டி.. எங்கே? எப்போது காணலாம்?

முதல் போட்டியில் விராட் கோலி அசத்தல்:

ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. இந்த போட்டியில் விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதுமட்டுமின்றி, கே.எல். ராகுல் 60 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும் எடுத்தனர். இந்த 3 பேரின் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புவார்கள். முதல் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுகொடுத்த நிலையில், இந்த போட்டியில் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், அவரது இடம் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. முதல் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்த ருதுராஜ் கெய்க்வாட் ஜோபிக்கவில்லை. இந்திய அணிக்கு ரிஷப் பண்டின் விருப்பமும் உள்ளது. இருப்பினும், ஒரு போட்டிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்குவது நியாயமற்றது.

இந்திய அணியின் நிர்வாகத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவரை நீக்கிவிட்டு, ரோஹித்துடன் இணைந்து கெய்க்வாட்டுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்படலாம். ருதுராஜ் கெய்க்வாட் ஒரு தொடக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், ரிஷப் பண்ட் நான்காவது இடத்தில் விளையாடலாம். அணி நான்காவது இடத்தில் திலக் வர்மாவையும் முயற்சி செய்யலாம்.

பந்துவீச்சில் மாற்றம் நிகழுமா..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 350 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினாலும், மிடில் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுகொடுத்தது. இதை இந்திய அணி நிர்வாகம் கவனிக்க வேண்டிய விஷயம். இருப்பினும், பந்துவீச்சு தாக்குதலில் எந்த மாற்றங்களும் இருக்குமா என்பது தெரியவில்லை.

ALSO READ: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?

கணிக்கப்பட்ட இந்திய அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட்/ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்

Follow Us