AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரம்மோற்சவம்….

Vallakkottai Murugan Temple Brahmotsavam: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா வரும் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் மிகவும் விமரிசையாகத் தொடங்குகிறது. திருவிழா நாள்கள் அனைத்திலும் பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரம்மோற்சவம்….
வல்லக்கோட்டை முருகன் கோவில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 May 2026 15:10 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மகா உற்ஸவம் நடைபெற உள்ளதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொடியேற்றமும் தொடக்க நாள்களின் வாகனச் சேவைகளும்

இவ்விழாவானது வரும் 21-ஆம் தேதி காலை முறைப்படி கொடியேற்றத்துடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை கொடியேற்றம் முடிந்ததும் ‘சவுடால் உற்சவம்’ நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்று மாலை சுவாமி ‘வெள்ளிமயில் வாகனத்தில்’ வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். மறுநாள் 22-ஆம் தேதி காலையில் ‘சூரியபிரபை’ வாகனத்திலும், மாலையில் ‘சந்திரபிரபை’ வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 23-ஆம் தேதி காலையில் ‘கேடய உற்சவமும்’, மாலையில் ‘ஆட்டுக்கிடா வாகனச் சேவையும்’ நடைபெறும். 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் முறையே காலை மற்றும் மாலை வேளைகளில் கேடய உற்சவங்களும், 25-ஆம் தேதி மாலை விசேஷ ‘அன்னவாகன உற்சவமும்’ சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

விழாவின் முக்கிய அம்சங்களும் திருக்கல்யாண வைபவமும்

பிரம்மோற்சவத்தின் அடுத்தடுத்த நாள்களான 26-ஆம் தேதி காலையில் ‘கற்பக விருட்ச வாகனத்திலும்’, மாலையில் ‘கேடயத்திலும்’ இறைவன் எழுந்தருள்வார். தொடர்ந்து 27-ஆம் தேதி காலையில் ‘உள்புறப்பாடு ரதமும்’, மாலையில் ‘மகா அபிஷேகமும்’ வெகு விமரிசையாக நடத்தப்படும். 28-ஆம் தேதி காலையில் ‘ஆள்மேல் பல்லக்கு’ உற்சவமும், மாலையில் ‘குதிரை வாகன’ சேவையும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சுவாமியின் ‘கல்யாண உற்சவம்’ (திருக்கல்யாணம்) வரும் 29-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் ‘தல விருட்ச வாகனமும்’, திருக்கல்யாணத்தை விவரிக்கும் விதமாக இரவில் ‘பெரிய மயில் வாகன உற்சவமும்’ அரங்கேற நினைகின்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சிகளும் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளும்

விழாவின் இறுதிப் பகுதியாக 30-ஆம் தேதி காலையில் ‘சிறிய மயில் வாகன’ புறப்பாடும், அதனைத் தொடர்ந்து புனித நீர்நிலைகளில் ‘தீர்த்தவாரியும்’ நடைபெறும். அன்று மாலை ‘புஷ்ப பல்லக்கு’ ஊர்வலத்துடன் பிரம்மோற்சவ கொடியிறக்கம் செய்யப்பட்டு முதன்மை விழா நிறைவடையும். எனினும், அதன் தொடர்ச்சியாக 31-ஆம் தேதி காலையில் ‘சண்டிகேசர் வெள்ளி இடப வாகன’ புறப்பாடும், மாலையில் ‘விடையாற்றி உற்சவமும்’ நடைபெற்று விழா முழுமையாக மங்களகரமாக நிறைவுபெறும். இந்த உற்சவ நாள்கள் அனைத்திலும், கோவிலில் உள்ள மயில் மண்டபத்தில் தினந்தோறும் மாலையில் பரதநாட்டியக் கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிகச் சிறப்பு சொற்பொழிவுகளும் நடத்த கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Follow Us