AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாவ நிவர்த்தி தரும் ஸ்ரீராம நவமி – நங்கநல்லூரில் ஆன்மீக திருவிழா தொடக்கம்

Sri Rama Navami Celebrations: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா விமரிசையாக தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இலட்சார்ச்சனை, யாகம், சீதாராம திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவின் நிறைவு நாளான மார்ச் 29ம் தேதி, சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடு நடைபெறவுள்ளது.

பாவ நிவர்த்தி தரும் ஸ்ரீராம நவமி – நங்கநல்லூரில் ஆன்மீக திருவிழா தொடக்கம்
நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Mar 2026 11:30 AM IST

நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இலட்சார்ச்சனை மற்றும் யாகங்கள் நடைபெறுகின்றன. பாவங்களைக் கரைத்து புண்ணியங்களைப் பெருக்கும் ஸ்ரீராம நவமி விழா இந்த ஆண்டும் பக்தி நிறைந்த சூழலில் கொண்டாடப்பட உள்ளது. “அஞ்சிலே ஒன்று பெற்றான்…” எனும் ஆழமான அர்த்தம் கொண்ட பாடல்கள் மற்றும் “ஸர்வ கல்யாண தாதாரம்…” என்ற ஸ்லோகங்கள் மூலம் பக்தர்கள் மனதில் இறைநம்பிக்கை வலுப்பெறுகிறது. இவ்விழா ராமபிரானின் அவதார மகிமையை நினைவுகூரும் ஒரு ஆன்மீக தருணமாக கருதப்படுகிறது. ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு புகழ்பெற்ற இந்த கோயிலில், ஸ்ரீராம நவமி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருத்தலங்களின் ஆன்மீக சிறப்பு

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர், சீதாதேவி மற்றும் இலக்குமணருடன் அருள்பாலிக்கும் பல திருத்தலங்கள் தொண்டை நாட்டில் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானதாக சென்னை நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள “அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர்” கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆஞ்சநேயஸ்வாமி விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

விழா ஏற்பாடுகள் மற்றும் தொடக்க நிகழ்ச்சிகள்

ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு புகழ்பெற்ற இந்த கோயிலில், ஸ்ரீராம நவமி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் பங்குனி மாதம் 6ம் நாள் (20.03.2026) முதல் பங்குனி 15ம் நாள் (29.03.2026) வரை இலட்சார்ச்சனை மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெற உள்ளன. இந்த காலத்தில் கோதண்டராம சுவாமிக்கு பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு செய்வார்கள். ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு புகழ்பெற்ற இந்த கோயிலில், ஸ்ரீராம நவமி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Also Read: இன்று ராம நவமி.. வீட்டில் இப்படி வழிபாடு செய்தால் ராமர் அருள் கிட்டும்!

சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள்

உலக நன்மைக்காக நடைபெறும் இந்த விழாவில், 21.03.2026 அன்று சந்தனக்காப்பு அலங்காரம், 22.03.2026 அன்று பால் அபிஷேகம் மற்றும் ஸ்ரீ சீதாராம திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27.03.2026 அன்று சிறப்பு திருமஞ்சனம், மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இறுதிநாள் விழா மற்றும் பக்தர்களுக்கு அழைப்பு

விழாவின் நிறைவு நாளான 29.03.2026 அன்று மாலை 7 மணிக்கு இலட்சார்ச்சனை பூர்த்தியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் இறையருள் பெற்று வாழ்வில் இன்பம் பெறுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இந்த ஆன்மீக விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us