Vaali: பிறப்பால் வைஷ்ணவர்.. தீவிர முருக பக்தராக வாலி மாறிய கதை!

Lord Murugan: கவிஞர் வாலி, வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், தனது சகோதரியின் மரணத்தின் விளிம்பில் இருந்த நேரத்தில் முருகன் பக்தரானார். திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சகோதரிக்கு ஒரு மருத்துவர் அளித்த சிகிச்சையால் அவர் குணமடைந்தார். இந்த அதிசய நிகழ்வு வாலியை முருகன் பக்தனாக்கியது.

Vaali: பிறப்பால் வைஷ்ணவர்.. தீவிர முருக பக்தராக வாலி மாறிய கதை!

கவிஞர் வாலி

Published: 

12 Jun 2025 13:57 PM

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு (secularism Country) என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இங்கு பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் உணவுகள் உடைகள் என அனைத்தும் உள்ளது. இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றொரு மதத்தைச் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். மனதளவில் மற்ற மதத்தினரையும் மதிப்பார்கள். மற்ற மதத்தின் நிகழ்வுகளையும் விரும்புவார்கள். வழிபாட்டு தலங்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இப்படி பல நிகழ்வுகளை காணலாம். அப்படியாக மற்ற மதத்தின் மீது பற்று, மரியாதை வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. அதேபோல் ஒரு மதத்தினுள் இருக்கும் பல்வேறு சமயங்களிலும் இந்த பற்று என்பது ஏற்படும். அப்படியாக மறைந்த கவிஞர் வாலி (Lyricist Vaali) பிறப்பால் ஒரு வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது அனைவருக்கும். அவர் தீவிர முருக பக்தராக (Murugan Devotee) மாறியதற்கு ஒரு காரணம் உள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

முருக பக்தராக மாறிய கதை

இந்த வீடியோ வாலி இறப்பதற்கு சில ஆண்டுகள் முன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பார். அதாவது, “1948 ஆம் ஆண்டு என்னுடைய சகோதரிக்கு சிரோசிஸ் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இது நாள்பட்ட கல்லீரல் நோயாகும். வயிற்றில் டியூப் போட்டு நீரை வெளியே எடுப்பார்கள். இரண்டு முறைக்கு மேல் எடுத்தால் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விடுவார். திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். நான் அப்போது உணர்ச்சிகரமாக செயல்பட்டு கொண்டிருந்த காலம். என்னுடைய சகோதரி பிழைக்க மாட்டார் அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் என மருத்துவமனையில் கூறி விட்டார்கள்.

அப்போது எனது நண்பர் அருகில் இருக்கும் ஆண்டாள் தெருவில் ஒரு மருத்துவர் இருக்கிறார், போய் பார்க்கலாம் என கூறினார். இதற்கு மேல் அவரை போய் பார்த்து என்ன ஆகப் போகிறது என நான் யோசித்தேன். ஆனால் என்னுடைய நண்பன் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான். அந்த மருத்துவர் காச நோய் போன்ற பாதிப்புகளுக்கு வைத்தியம் பார்க்கும் கைதேர்ந்தவர். வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். அந்த மருத்துவரிடம் எனது சகோதரியை அழைத்துக் கொண்டு நடந்ததை சொன்னோம். அவர் ஏதோ ஒரு ஊசி போட்டார். எனது சகோதரி பிழைத்துக் கொண்டார். இறந்து விடுவார் என கூறப்பட்ட நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் கல்யாணம் செய்து கொடுக்கும் போது எப்படி இருந்தாரோ அந்த அளவுக்கு மாற்றம் பெற்றிருந்தார்.

கற்பனை என்றாலும் பாடல் உருவானது இப்படித்தான்


அப்படி வைத்தியம் பார்த்த அந்த மருத்துவரின் பெயர் சுப்பிரமணியன். அந்த வினாடியில் இருந்து நான் முருக பக்தனாக மாறினேன். உடனே கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என பாடல் எழுதி டி.எம்.சௌந்தரராஜனை வைத்து பாட வைத்தேன். அப்போது முதல் நான் விபூதி வைத்து கொள்ள தொடங்கினேன். இவற்றையெல்லாம் விட அதிசயம் என்னவென்று கேட்டால் அடுத்த வினாடி இறந்து விடுவார் என எல்லா மருத்துவராலும் சொல்லப்பட்ட எனது சகோதரி 85வது வயதில் தான் இறந்தார்” என வாலி கூறியிருப்பார்.