ஐயப்ப சுவாமிகள் அணியும் 2 வகையான மாலைகள் – இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Sabarimala Mala Tradition : சபரிமலை சீசன் தொடங்கியிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுவாக இரண்டு விதமான மாலை அணிகிறார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதற்கு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஐயப்ப சுவாமிகள் அணியும் 2 வகையான மாலைகள் - இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

20 Nov 2025 21:50 PM

 IST

ஐயப்ப சுவாமிகள் அணியும் மாலைகளில் 2 வகைகள் உள்ளன. இந்த மாலையை அணிவதன் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், ஐயப்பன் சிவனின் மகன் என்ற கூற்றுள்ளது.  மண்டல பூஜை காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 41 நாட்களில், விரதம் இருந்து மாலை அணிந்து மலை ஏறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 41 நாள் விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நபரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. சுவாமிகள் மாலை அணிந்து,  கருப்பு நிறத்தில் உடைகள் அணிந்து மலைக்கு செல்கிறார்கள். சபரிமலை (Sabarimala) செல்லும் பக்தர்கள் 41 நாட்கள் கடுமையாக விரதம் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக, சுவாமிகள் கருப்பு நிற ஆடைகளை அணிவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஐயப்ப சுவாமிகள் கருப்பு நிற ஆடைகளை இந்த உலகின் மீதான பற்றின்மையின் அடையாளமாக அணிவார்கள். மண்டலத்தின் 41 நாட்கள் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், சுவாமிகள் கருப்பு ஆடைகளை அணிவது அதன் ஒரு பகுதியாகும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படிக்க : தீப எண்ணெய் நன்மைகள்.. எந்த எண்ணெயில் என்ன பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் அணியும் மாலைகளில் உள்ள வித்தியாசங்கள்

சபரிமலை பயணத்துக்கு தயாராகும் பக்தர்கள் அணியும் மாலைகள் பொதுவாக முத்திரைமாலை என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு வகைகள் உள்ளன. துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலை. துளசி மாலை என்பது துளசி மரத்தால் செய்யப்பட்ட மணிகளால் ஆன மாலை. இது முக்கியமாக விஷ்ணு பக்தர்களால் அணியப்படுகிறது. தர்மத்தின் குருவான ஐயப்பன் விஷ்ணு மற்றும் சிவனின் மகன் என்ற நம்பிக்கையில் இது செய்யப்படுகிறது. துளசி மாலை அணிவது விஷ்ணுவின் சக்தி  மற்றும்  பக்தர்களுக்கு விஷ்ணு மீதான பக்தியைக் குறிக்கிறது.

துளசி மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. அடுத்தது ருத்ராட்ச மாலை. இது ருத்ராட்ச மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மாலை. ருத்ராட்ச மாலை பொதுவாக சிவ பக்தர்களால் அணியப்படுகிறது. ருத்ராட்ச மாலை அணிவதற்குப் பின்னால் உள்ள நம்பிக்கை என்னவென்றால், ஐயப்பன் சிவன் மற்றும் விஷ்ணுவின் மகன்.

இதையும் படிக்க : சபரிமலைக்கு தேங்காயில் நெய் நிரப்பி எடுத்து செல்வதால் என்ன பலன்?

ருத்ராட்ச மாலை அணிவது ஒரு நபரின் செறிவு அதிகரிக்கவும் அவர்களுக்கு ஆற்றலை அளிக்கவும் உதவும் என்றும் நம்பப்படுகிறது. இது தவிர, சிலர் ஸ்பதிக மாலை அணிவார்கள். ஐயப்பனைத் தரிசிக்க விரதம் இருந்து மாலை அணிந்த பிறகு, எளிய வாழ்க்கை, பிரம்மச்சரியம், மதுவில் இருந்து விலக்கு, நேர்மை, மனம், உடல் மற்றும் வார்த்தைகளின் தூய்மை ஆகியவை கட்டாயமாகும். விரதம் எடுத்து மாலை அணிவதன் மூலம், அந்த பக்தர் ஐயப்பனாக  மாறுகிறார் என்றும் நம்பப்படுகிறது. அதனால் ஐயப்ப பக்தர்களை சாமிகள் என அழைக்கப்படுகின்றனர்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?