AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

Sabarimala Devotee Tradition : ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து கருப்பு ஆடைகளை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.  ஐயப்ப தரிசனத்திற்குச் செல்பவர்கள் கருப்பு ஆடைகளை அணிவதற்கு பல ஆன்மீக மற்றும் சடங்கு காரணங்கள் உள்ளன. அது குறித்து பார்க்கலாம்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Nov 2025 22:10 PM IST

ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து கருப்பு ஆடைகளை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு (Sabarimala) செல்வது வழக்கம்.  ஐயப்ப தரிசனத்திற்குச் செல்பவர்கள் கருப்பு ஆடைகளை அணிவதற்கு பல ஆன்மீக மற்றும் சடங்கு காரணங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான  மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் 16, 2025 அன்று சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர். சடங்குகள் மற்றும் பக்தியுடன் 41 நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பவர் தனது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை அனுபவிப்பார் எனநம்பப்படுகிறது. இந்த கட்டுரையில் பக்தர்கள் கருப்பு உடை அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து பார்க்கலாம்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?

பொதுவாக, விரதத்தைக் கடைப்பிடித்து சபரிமலைக்குச் செல்லத் தயாராகும் சுவாமிகள் கருப்பு ஆடைகளை அணிவார்கள். ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து கருப்பு ஆடைகளை அணிவார்கள். ஐயப்ப தரிசனத்திற்குச் செல்பவர்கள் கருப்பு ஆடைகளை அணிவதற்கு பல ஆன்மீக மற்றும் சடங்கு காரணங்கள் உள்ளன.

இதையும் படிக்க : உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளதா? அப்போ இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள்!

கருப்பு ஆடைகளை அணிவது முக்கியமாக ஆசைகளைத் துறப்பதன் அடையாளமாகும். கருப்பு நிறம் பொதுவாக வாழ்க்கையின் ஆடம்பரங்கள் மீதான வெறுப்பைக் குறிக்கிறது. இந்த உடையை அணிவதன் மூலம், பக்தர் தற்காலிகமாக தனது உலக ஆசைகளையும் இன்பங்களையும் கைவிட்டு, இறைவனுக்கு முழுமையாக தங்களை அர்ப்பணிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

மேலும், கருப்பு ஆடைகளை அணிவது மனதில் ஒருமுகப்படுத்துவதற்கு நல்லது என்று கருதப்படுகிறது. கருப்பு ஆடைகளை அணிவது மனதை இறைவனின் சிந்தனையில் முழுமையாக நிலைநிறுத்த உதவும். மற்றொன்று சனி பகவானுடன் தொடர்புடையது. சபரிமலையில் முக்கிய வழிபாடுகளில் ஒன்று சனியின் தீமைகளை நீக்கும் வழிபாடு. கருப்பு என்பது சனி கிரகத்தின் விருப்பமான நிறம்.

இதையும் படிக்க : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!

சனி தோஷம் உள்ளவர்களுக்கு நன்மை

எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் கருப்பு ஆடைகளை அணிந்து மலையில் கால் வைப்பது சனிக்கு பயந்து நல்லதாகக் கருதப்படுகிறது. இது சனியால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. மற்றொன்று சமத்துவத்தின் அடையாளமாக உள்ளது. அதாவது, சாதி, மதம் அல்லது சமூக படிநிலைகளை பொருட்படுத்தாமல் சபரிமலையில் அனைவரும் ஒன்று என்பதற்கு ஒரு முன்மாதிரியாகவும், இதன் மூலம், சபரிமலைக்கு வருபவர்களிடையே பொருளாதார அல்லது சமூக வேறுபாடுகளை நீக்குவதும் ஆகும்.

கருப்பு ஆடைகளை அணிவதன் மூலம், அனைவரும் சுவாமிகளாக மாறுகிறார்கள். மற்றொரு காரணம் வானிலை. ஏனெனில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் காலம் பொதுவாக குளிர் மாதங்களாகும். கருப்பு நிற ஆடைகள் வெப்பத்தை ஈர்க்கும் என்பதால், காலை மாலை நேரங்களில் குளிரில் இருந்து நிவாரணம் பெற இந்த ஆடைகள் உதவும்.

Follow Us