AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Winter Health Tips: குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறதா? வராமல் இருக்க உதவும் குறிப்புகள்!

Winter Morning Health Tips: காலையில் எழுந்தவுடன் தரையில் நேரடியாக காலடி எடுத்து வைக்காமல், செருப்பு அணிந்து தரையில் ஊன்றுங்கள். முடியாவிட்டால், குறைந்தபட்சம் சாக்ஸ்களை அணிந்து கொண்டு கால்களை மிதிக்க முயற்சி செய்யுங்கள். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த தரையில் நேரடியாக காலடி எடுத்து வைப்பதால் உங்களுக்கு சளி பிடிக்கும்.

Winter Health Tips: குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறதா? வராமல் இருக்க உதவும் குறிப்புகள்!
ஆரோக்கிய குறிப்புகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Dec 2025 16:52 PM IST

குளிர்காலம் (Winter) என்பதால் வானிலை மாறி காற்றும் குளிர்ச்சியாக மாற தொடங்கும். வானிலை மாறும்போது கிட்டத்தட்ட எல்லா வயதினருக்கும் உடல்நிலை சரியில்லாமல் ஆகும் நேரம் இது. ஏன் நீங்கள் கூட சளி (Cold), இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். இதனால் மூக்கு, காதுகள் மற்றும் தொண்டை அடைப்படலாம். மேலும், தலை மற்றும் கழுத்தில் வலியை கொடுக்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் சில எளிய குறிப்புகளை பின்பற்றினால், குளிர்காலத்திலும் கூட சளி, இருமல் மற்றும் சளி பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கலாம்.

ALSO READ: குறைவாக தண்ணீர் குடிக்கிறீர்களா? இது மன அழுத்தத்தை அதிகரிப்பது ஏன்?

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?

  • தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இது உங்கள் மூக்கு, காதுகள் மற்றும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க உதவும். இது மார்பில் தேங்கியிருக்கும் சளியை கரைக்க உதவி செய்யும்.
  • வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குளிர்காலத்தில், மக்கள் பெரும்பாலும் குறைவாகவே தண்ணீர் குடிப்பார்கள். இது அஜீரணப் பிரச்சினையை அதிகரிக்கிறது. காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் அஜீரணம், அனைத்து வாயு பிரச்சினைகள் மற்றும் அமிலத்தன்மை ஏற்படும் போக்கு ஆகியவை நீங்கும்.
  • காலையில் எழுந்தவுடன் தரையில் நேரடியாக காலடி எடுத்து வைக்காமல், செருப்பு அணிந்து தரையில் ஊன்றுங்கள். முடியாவிட்டால், குறைந்தபட்சம் சாக்ஸ்களை அணிந்து கொண்டு கால்களை மிதிக்க முயற்சி செய்யுங்கள். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குளிர்ந்த தரையில் நேரடியாக காலடி எடுத்து வைப்பதால் உங்களுக்கு சளி பிடிக்கும்.

ALSO READ: தூங்குவதற்குமுன் காலில் சாக்ஸ் அணிவதால் நன்றாக தூக்கம் வருமா? உண்மை என்ன?

  • காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். இந்த பானம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பானம் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
    தேன் தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு சளி எளிதில் பிடிக்காது. உங்கள் மார்பில் சேரும் சளியையும் வெளியேற்றும். இருமல் பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். இருப்பினும், அதிகமாக தேன் சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருப்பது அவசியம்.
  • காலையில் எழுந்ததும் முகம் கழுவும்போது, ​​வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். நேரடியாக குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுவது சளி பிடிக்க செய்யும். எழுந்தவுடன் உடனடியாக குளிக்காமல் இருப்பது நல்லது. உங்கள் உடல் வெப்பநிலை சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறட்டும். அதன்பிறகு குளிப்பது சளி பிடிக்காமல் தடுக்கும்.

Follow Us