AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WITT Summit: நிலையற்ற உலக சூழல்.. இந்தியாவின் முக்கிய நோக்கம் – WITT மாநாட்டை முன்னிட்டு பருண் தாஸ் பேச்சு..

கடந்த ஆண்டு உலகமயமாக்கலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக பருண் தாஸ் தெரிவித்தார். சுங்க வரிகள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டதும், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு போர்களின் அச்சம் நிஜமாக மாறியதும் உலகத்தை பொருளாதார நிலையற்ற நிலையில் தள்ளியதாக கூறினார். இந்தியாவுக்கு போர் நேரடியாக வராதபோதிலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

WITT Summit: நிலையற்ற உலக சூழல்.. இந்தியாவின் முக்கிய நோக்கம் – WITT மாநாட்டை முன்னிட்டு பருண் தாஸ் பேச்சு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Mar 2026 20:23 PM IST

மார்ச் 20, 2026: உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் புவியியல் அரசியல் மோதல்களால் நிர்ணயிக்கப்படும் சூழலில், இந்தியா ஒரு முக்கியமான நிலைத்தன்மை வழங்கும் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று TV9 நெட்வொர்க் நிறுவனத்தின் MD & CEO பருண் தாஸ் தெரிவித்தார். நான்காவது வாட் இந்தியா திங்ஸ் டுடே சம்மிட் 2026 மாநாட்டை முன்னிட்டு அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த மாநாடு மார்ச் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.

உலக நிலை குறித்து கவலை: 

கடந்த ஆண்டு உலகமயமாக்கலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக பருண் தாஸ் தெரிவித்தார். சுங்க வரிகள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டதும், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு போர்களின் அச்சம் நிஜமாக மாறியதும் உலகத்தை பொருளாதார நிலையற்ற நிலையில் தள்ளியதாக கூறினார். இந்தியாவுக்கு போர் நேரடியாக வராதபோதிலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை: 

உலக வளர்ச்சிக்கான முக்கியமான எரிசக்தி வளங்கள் தற்போது நெருக்கடியில் உள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இது இந்தியாவை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என கூறினார்.

பல்துறை அணுகுமுறையின் பலன்: 

இந்தியா பின்பற்றும் பல்துறை (multi-alignment) அணுகுமுறை நல்ல பலன்களை அளித்து வருவதாக பருண் தாஸ் கூறினார். நிரந்தர கூட்டணிகளை விட, நிரந்தர நலன்களையே முன்னிறுத்தும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த அணுகுமுறை செயல்படுகிறது என விளக்கினார்.

இந்தியாவின் தனித்துவமான நிலை: 

தற்போது உலகம் போர்கள், சமத்துவமின்மை மற்றும் வன்முறையிலிருந்து வெளியேற முயற்சிக்கும் சூழலில், இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், இளம் மக்கள் தொகை, சர்வதேச அரங்கில் அதிகரித்து வரும் செல்வாக்கு ஆகியவை இந்தியாவின் பலமாக உள்ளன என கூறினார்.

மேலும், ஜனநாயக அமைப்பு, தொழில் முனைவோர் சூழல் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவை இந்தியாவை மாற்றத்திற்கான புதிய நூற்றாண்டுக்குத் தள்ளிச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் உரை முக்கிய அம்சம்

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய உரை இடம்பெற உள்ளது. மூன்றாவது முறையாக அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த ஆண்டின் தலைப்பு “India & The World” (இந்தியா மற்றும் உலகம்) ஆகும்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஜ்யோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், மாநில முதல்வர்கள் மோகன் யாதவ், புஷ்கர் சிங் தாமி, பஜன் லால் சர்மா, நயாப் சிங் சைனி, பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மற்ற முக்கிய பிரபலங்கள்:

இந்த மாநாட்டில் ப்ரொஃ. ராம் சரண் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கின்றனர். மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சௌரவ் காங்குலி மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

Follow Us