AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கேரளாவில் பரபரப்பு..

முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிணராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சி.எம்.ஆர்.எல் - எக்சாலாஜிக் நிதி பரிவர்த்தனை வழக்குடன் தொடர்புபடுத்தி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிணராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு, சி.எம்.ஆர்.எல் அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கேரளாவில் பரபரப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 May 2026 09:31 AM IST

கேரளா, மே 26, 2026: முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிணராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சி.எம்.ஆர்.எல் – எக்சாலாஜிக் நிதி பரிவர்த்தனை வழக்குடன் தொடர்புபடுத்தி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிணராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு, சி.எம்.ஆர்.எல் அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சரும், பிணராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வீணா விஜயனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் பிணറായി விஜயனிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு பின்னடைவு

சிஎம்ஆர்எல் மாதப்பாடி வழக்கில் விசாரணையை தொடரலாம் என்று சமீபத்தில் உயர்நீதிமன்ற தனி அமர்வு உத்தரவிட்டது. வழக்கில் விசாரணையை தடுக்க வேண்டும் என கோரி கரிமணல் நிறுவனம் சிஎம்ஆர்எல்லின் நிர்வாக இயக்குநர் சசிதரன், நிறுவனத்தின் நிதி அலுவலர் கே.எஸ். சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்களான அஞ்சு ரேச்சல், சந்திரசேகரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேல்முறையீடு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தாலும், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

எக்சாலாஜிக் – சிஎம்ஆர்எல் வழக்கு என்ன?

முன்னாள் முதலமைச்சர் பிணராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு சொந்தமான “எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்” நிறுவனத்திற்கு, செய்யப்படாத சேவைகளுக்காக சிஎம்ஆர்எல் நிறுவனம் பெரும் தொகையை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித்துறை தீர்வு வாரியத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

மேலும் படிக்க: கேரளாவில் இறந்தும் வாழ்வளித்த குழந்தை ஆலின்.. தியாகத்தை போற்ற கேரளா அரசு செய்த செயல்!

கரிமணல் அகழ்வு மேற்கொண்டு வந்த சிஎம்ஆர்எல் நிறுவனம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், தனது நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்காக கேரளாவின் அரசியல் தலைவர்களுக்கு பணம் வழங்கியதாகவும் வருமான வரித்துறை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதில் அதிகளவில் பணம் பெற்றவர்களில் பிணராயி விஜயனும் ஒருவர் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதலமைச்சரின் மகள் என்ற அடிப்படையில் வீணா விஜயனின் “எக்சாலாஜிக்” நிறுவனத்திற்கு மாதந்தோறும் 1.72 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரியில் வருமான வரித்துறை சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 132.82 கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 1.72 கோடி ரூபாய் வீணா விஜயன் மற்றும் எக்சாலாஜிக் நிறுவன கணக்குகளுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனுதாரர்கள் வாதம்

கள்ளப்பணத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையான குற்றச்சாட்டுகள் இல்லை என்றும், அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்த அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

மேலும், தீவிர மோசடி விசாரணை அலுவலகமான எஸ்எப்ஐஓ ஏற்கனவே நிறுவன சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வருவதால், பிற அமைப்புகள் தனியாக விசாரணை நடத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த வாதங்களை நிராகரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு விசாரணையை தொடர அனுமதி வழங்கியது.

Follow Us