சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!

New Born Baby Body on Road Side | பெங்களூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆண பெண் குழந்தை ஒன்று சாலை ஓரத்தில் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Nov 2025 10:28 AM

 IST

பெங்களூரு, நவம்பர் 03 : பெங்களூரில் (Bengaluru) பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை (New Born Girl Baby) சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு அருகே உள்ள சாலையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தான் குழந்தை வீசப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலம்

கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசகோட்டை பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சாலை ஓரம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் சடலத்தை கண்ட பொதுமக்கள் அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : பள்ளியின் 4வது மாடியிலிருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை… ஜெய்ப்பூரில் பரபரப்பு சம்பவம்

உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குழந்தை உயிருடன் சாலை ஓரத்தில் வீசப்பட்டதா அல்லது இறந்து பிறந்த நிலையில், சாலை ஓரத்தில் வீசப்பட்டதா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க : இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!

மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்களிடம் விசாரணை

குழந்தை சாலையில் விசப்பட்ட அதே பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றவர்கள் யாரேனும் ஒருவர் தான் குழந்தையை சாலையில் வீசி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!
வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை
குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்