Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அகமதாபாத் விமான விபத்து: உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை…

Mother's Sacrifice Saves Daughter: அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், மருத்துவர் சஞ்சல் பண்டாரியின் இரண்டு வயது மகள் வித்யாங்ஷி, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் சிக்கினாள். தாயின் அறிவுறுத்தலின் பேரில், பராமரிப்பாளர் குழந்தையை கூரையிலிருந்து கீழே தூக்கி எறிந்தார். கீழே இருந்தவர்கள் குழந்தையைப் பிடித்தனர்.

அகமதாபாத் விமான விபத்து: உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை…
உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Jun 2025 10:31 AM

அகமதாபாத் ஜூன் 14: 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத் (Ahamadabad) விமான நிலையத்தில் நடந்த விமான (Flight Crash) விபத்தில் மருத்துவ விடுதி கட்டிடம் (Medical hostel building) சேதமடைந்தது. மருத்துவர் சஞ்சல் பண்டாரியின் இரண்டு வயது மகள் வித்யாங்ஷி (Two-year-old daughter Vidyangshi) பராமரிப்பாளருடன் அங்கு இருந்தாள். தீ பரவிய நிலையில், தாயின் அறிவுறுத்தலின்படி, குழந்தையை கூரையிலிருந்து கீழே தூக்கி எறிய பராமரிப்பாளர் முடிவெடுத்தார். கீழே காத்திருந்தவர்கள் குழந்தையைப் பிடித்து உயிரைக் காப்பாற்றினர். குழந்தை படுகாயம் அடைந்தபோதிலும் தற்போது சிகிச்சையில் உள்ளது. இந்தச் சம்பவம் தாயின் காதலும், தியாகமும் வெளிப்படுத்துகிறது.

அகமதாபாத் விமான விபத்து

2025 ஜூன் 12 ஆம் தேதி கடந்த வியாழக்கிழமை அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கோரமான விமான விபத்தில், இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரைக் காப்பாற்ற ஒரு கட்டிடத்தின் கூரையிலிருந்து தூக்கி எறியப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், ஒரு தாயின் துணிச்சலையும், பராமரிப்பாளரின் தியாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

கோர விபத்தின் பின்னணி

2025 ஜூன் 12 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 1:38 மணிக்கு, லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று (242 பேர் கொண்ட பயணிகளுடன்) டேக் ஆஃப் ஆன 49 வினாடிகளுக்குப் பிறகு, பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பல உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டன. மருத்துவத் துறையைச் சேர்ந்த பலரும் இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்ததால், அவர்களும் விபத்தில் சிக்கினர்.

உயிருக்குப் போராடிய தாய் மற்றும் மகளின் துயரம்

அகமதாபாத் மிரர் செய்தி தாளில் வெளியான தகவலின் படி, யு.என். மேத்தா மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் சஞ்சல் பண்டாரிக்கு, இந்த விபத்து நடந்த அடுத்த கணங்கள் பீதியால் நிரம்பின. அவரது இரண்டு வயது, குழந்தையான வித்யாங்ஷி, விபத்து நடந்தபோது ஒரு பராமரிப்பாளருடன் விடுதியில் சிக்கியிருந்தாள்.

நடுங்கிய குரலில் விவரித்த மருத்துவர்

மருத்துவர் பண்டாரி, நடுங்கிய குரலில் நடந்தவற்றை விவரித்தார்: “நான் கடமையில் இருந்தபோது, பராமரிப்பாளர் பீதியுடன் எனக்கு அழைத்தார். ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், புகை மற்றும் தீப்பிழம்புகளால் சுற்றிலும் நிரம்பியிருப்பதாகவும் கூறினார். என்ன நடக்கிறது என்று நான் புரிந்துகொள்வதற்குள், மீண்டும் அழைத்தார், இம்முறை அதிர்ச்சியில், எல்லா இடங்களிலும் தீப்பிடித்து எரிவதாகவும், வெளியேற வழியே இல்லை என்றும் தெரிவித்தார்.”

தாயின் துணிச்சலான முடிவு

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த டாக்டர் பண்டாரியை, புகை மண்டலமும், குழப்பமும் சூழ்ந்தன. “மக்கள் உதவி கேட்டு அலறுவதைக் கேட்டேன். என் மகள் உயிருடன் இருப்பாளா என்று பயந்தேன்,” என்றார் அவர். ஆபத்து நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், தன் மகளைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக, பராமரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, குழந்தையுடன் கட்டிடத்தின் கூரைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

கூரையிலிருந்து குழந்தை மீட்பு

பின்னர், கீழே காத்திருந்தவர்களின் கைகளில் குழந்தையைத் தூக்கி வீசுமாறு பராமரிப்பாளரை டாக்டர் பண்டாரி சமாதானப்படுத்தினார். பெரும் தயக்கத்திற்குப் பிறகு, பராமரிப்பாளர் வித்யாங்ஷியை கூரையிலிருந்து கீழே எறிந்தார். கீழே விழுந்தபோது குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக அவளது உயிர் காப்பாற்றப்பட்டது.

பராமரிப்பாளர் பின்னர் தீயணைப்புத் துறையின் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டார். படுகாயமடைந்த குழந்தை வித்யாங்ஷி, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்தச் சம்பவம், மனித உயிர் காக்கும் போராட்டத்தின் தீவிரத்தையும், ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.