Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அகமதாபாத் விமான விபத்து.. பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு.. வெளியான தகவல்!

Ahmedabad Plane Crash : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே, விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியில் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் விமான விபத்து.. பலி எண்ணிக்கை 274  ஆக உயர்வு.. வெளியான தகவல்!
அகமதாபாத் விமான விபத்துImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 09:00 AM

குஜராத், ஜூன் 14 : அகமதாபாத் விமான விபத்தில் (Ahmedabad Plane Crash) உயிரிழப்பு எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது (Ahmedabad Plane Crash Death Toll) பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே, விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியில் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா (Air India) நிறுவனத்திற்கு சொந்தமன போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் மதியம் 1.30 மணியளவில் புறப்பட்டது. விமானத்தில் 2 விமானிகள் உள்பட 12 ஊழியர்கள் மற்றும் 242 பயணிகள் இருந்தன. இவர்களின் 169 பேர் இந்தியர், 53 பேர் பிரிட்டன், 7 பேர் போர்ச்சுகல், ஒருவர் கனடா ஆகியோர் இருந்தனர்.

பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு

விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென கீழ நோக்கி இறங்கிய விமானம், அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மீது விழுந்து சிதறி தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

இந்த விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதியது. இதில் கல்லூரி வளாகத்தில் இருந்து பலரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்டிடிவி தகவலின்படி, இதில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால், பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

கருப்பு பெட்டி


இதற்கிடையில்,  விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  உடைந்த கிடக்கும் விமானத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் மீட்பு படைகள் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு விபத்துக்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தரவு, காக்பிட் குரல் பதிவுகள், விமான பராமரிப்பு பதிவுகள், சாட்சிகள் குறித்து குழு விசாரணை நடத்தும். இதற்கிடையில்,  2025 ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைவில் விமான விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருப்பு பெட்டி   விமானி அறைக்குள் நடந்த முக்கிய  தகவல்களை சேரிக்க உதவும்.  மேலும்,  விமானத் தரவு ரெக்கார்டர் மூலம் உயரம், வேகம், விமான பாதை தரவு பதிவாகும். அதோடு,  காக்பிட் குரல் ரெக்கார்டர் மூலம் விமானிகளுக்கு இடையிலான  உரையாடலும் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...