சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்
Why Walking After Eating Is So Effective : நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்டதும் சிறிது நேரம் ஓய்வெடுக்கவே விரும்புகிறோம். ஆனால் அது நமது உடலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உட்கார்ந்த பிறகே அடுத்த வேலையை பார்க்க செல்கிறோம். சிலர் உடனடியாக படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இது சோர்வைக் குறைக்கும் என்று நீங்கள் நினைத்தாலும், அது உடலுக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். இது இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக கார்போஹைட்ரேட் (Carbohydrates) உள்ள உணவுகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் உடனடியாக அமர்ந்தால், உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு கணிசமாக அதிகரிக்கும். இது இப்படியே தொடர்ந்தால், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவது மட்டுமல்லாமல், வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியும் அபாயமும் உள்ளது. இதைத் தடுக்க ஒரு எளிய வழி இருக்கிறது. சாப்பிட்ட பிறகு குறைந்தது இரண்டு நிமிடங்கள் நடந்தால் மட்டும் போதும்.
நடைபயிற்சி உடலில் உள்ள முக்கியமான தசைகளுக்கு வேலை அளிக்கிறது. நீங்கள் சாப்பிட்ட பிறகு நடந்தால், உணவில் இருந்து குளுக்கோஸ் உடலில் வேகமாகப் பயன்படுத்தப்படும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல, நாம் உட்கொள்ளும் கலோரிகள் அதிகமாக இருந்தால், அவை உடலில் குறைவாகவே சேமிக்கப்படுகின்றன. இது வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆய்வுகளின்படி, சாப்பிட்ட உடனேயே 2 முதல் 5 நிமிடங்கள் நடப்பவர்களுக்கு உட்கார்ந்திருப்பவர்களை விட இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். இந்த எளிய நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இப்போது உணவுக்குப் பிறகு நடப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
சாப்பிட்ட உடன் நடப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
- இரத்த சர்க்கரை அளவு குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது.
- குளுக்கோஸானது உடலால் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
- உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வது குறையும்.
- செரிமானத்திற்கு உதவும்.
- மன அமைதி கிடைக்கும்.
- இதய ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
- தூக்கமின்மை பிரச்னைகள் நீங்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு கடினமான உடற்பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. சாப்பிட்டதும் 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளிக்கு பிறகு 2 நிமிடங்கள் மெதுவாக நடப்பது போதுமானது. உங்கள் வீட்டின் முன், பூங்காவில் என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். குறிப்பாக நடைபயிற்சி மன அமைதியையும் தருகிறது. இது ஆரோக்கியத்தையம் பலப்படுத்துகிறது. சாப்பிட்ட பிறகு இரண்டு நிமிடங்கள் நடப்பது போன்ற ஒரு சிறிய மாற்றம் கூட சிறந்த பலனைத் தரும். இந்தப் பழக்கத்தை தினமும் பின்பற்றினால், நீரிழிவு, அதிக எடை, கொழுப்பு போன்ற பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)