AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாராசிட்டமால் வேண்டாம்! உயிருக்கு ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள்

Avoid Self-Medication: தமிழகத்தில் கடும் கோடை வெயில் காரணமாக வெப்பவாதம் மற்றும் வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெப்பவாதம் ஏற்பட்டால் தங்களாகவே பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்வது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பாராசிட்டமால் வேண்டாம்! உயிருக்கு ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள்
மாதிரி புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Apr 2026 12:09 PM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தால் மக்கள் தினசரி வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், கோடைக்காலத்திற்கு உரிய நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

வெப்பவாதம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெப்பவாதம் அல்லது ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலையில், மருத்துவமனைகள் அனைத்தும் அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை தயாராக வைத்திருக்குமாறு பொது சுகாதாரத்துறை முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளது. அதிக வெப்பத்தால் மயக்கம், உடல் சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகிறது. இதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களை குளிர்ந்த மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்திற்கு மாற்றி, அவர்களை ஒருபக்கமாக படுக்கவைத்து ஓய்வளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தவறான மருந்து பயன்பாட்டால் ஏற்படும் அபாயம்

சிலர் வெப்பவாதத்தால் உடல் சூடு அதிகரித்தால் அதை காய்ச்சலாக நினைத்து தங்களாகவே மாத்திரைகள் எடுத்துக்கொள்வது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி உட்கொள்வது ஆபத்தானது என சுகாதாரத்துறை எச்சரிக்கிறது. இந்த மருந்துகள் தற்காலிகமாக உடல் வெப்பத்தை குறைத்தாலும், உடலின் உள்ளக நிலைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தி கடுமையான பக்கவிளைவுகளை உருவாக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் இது உயிருக்கு ஆபத்தாக மாறும் அபாயமும் உள்ளது.

சரியான முதலுதவி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. வெப்பவாதம் ஏற்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிப்பது மிக முக்கியம். அவர்களுக்கு தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவங்களை கொடுத்து உடல் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்த வேண்டும். மேலும், ஈரமான துணியை உடலில் வைத்து துடைப்பதன் மூலம் உடல் வெப்பத்தை இயற்கையாக குறைக்க முடியும்.

இந்த எளிய முறைகள் பல சமயங்களில் உயிரைக் காப்பாற்ற உதவக்கூடும். எனவே கோடைக்காலத்தில் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, அவர்களின் பரிந்துரையின்படி மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Follow Us