AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: கர்ப்பிணிகளே உஷார்! கோடையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Pregnant Womens in Summer: கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் ஏற்கனவே அசௌகரியத்தை கொடுக்கும். கோடையில் இவை இன்னும் அதிகரிக்கும். அதன்படி குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் கோடை காலத்தில் அதிகரிப்பதுடன், நீரிழப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Health Tips: கர்ப்பிணிகளே உஷார்! கோடையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
கோடை கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Apr 2026 16:56 PM IST

கோடைக்காலத்தில் (Summer) வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, ​​சாதாரண மனிதர்களால் கூட உடல்நலச் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. கோடையில் வெப்ப நிலையானது அனைவரையும் பாதித்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழப்பு, வெப்பத்தாக்கம் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கும். அதன்படி, கர்ப்பிணிப் பெண்கள் (Pregnant Women) கோடைக்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களையும் தவிர்க்க, நாங்கள் சொல்லும் இந்த விஷயங்களை பின்பற்றுவதன்மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ALSO READ: கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..? நீரிழப்பு எப்போது உண்டாகும்?

ஹார்மோன் மாற்றங்கள்:

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் ஏற்கனவே அசௌகரியத்தை கொடுக்கும். கோடையில் இவை இன்னும் அதிகரிக்கும். அதன்படி குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் கோடை காலத்தில் அதிகரிப்பதுடன், நீரிழப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கோடை காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

என்னென்ன முன்னெச்சரிக்கை தேவை..?

  • கோடை காலத்தில் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போவதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
  • கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதால், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. இது சில சமயங்களில் பிறக்காத குழந்தையையும் பாதிக்கக்கூடும். எனவே, வெளியில் சாப்பிடுவதையும், திறந்தவெளியில் விற்கப்படும் ஜூஸ்களை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்களின் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக மாறுவதால், தோல் தடிப்புகள், நிறமாற்றம் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
  • கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர், இளநீர், எலுமிச்சை நீர், மோர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ரஸான ஜூஸ்களை அருந்த வேண்டும்.
  • பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அல்லது வணிக ரீதியாகக் கிடைக்கும் ஜூஸ்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலும், தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் கோடைக்காலத்தில் வயிற்றைக் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ALSO READ: வீணாக்காதீங்க… தர்பூசணி தோலில் மறைந்துள்ள அதிசயம்…

  • கர்ப்பிணிப் பெண்கள் வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது தலையைத் துணியால் அல்லது தொப்பியால் மூடிக்கொள்ளவும், சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ளலாம்.
  • உடல் தளர்வாக இருப்பதற்கும், அதிகப்படியான வெப்பத்தைத் தணிப்பதற்கும், கர்ப்ப காலத்தில் இறுக்கமான காலணிகள், காலுறைகள் மற்றும் ஹை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
  • ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு அதிகப்படியான வியர்வை, காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது கருவின் அசைவு குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Follow Us