Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாவல் கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள்: டயட்டீஷியன் லீமா மகாராஜின் வழிகாட்டுதல்!

Java Plum Benefits:நாவல் பழக் கொட்டைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. வெறும் வயிற்றில் நாவல் கொட்டைப் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது. ஆனால், எந்தவொரு உடல்நலப் பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகுவது அவசியம்.

நாவல் கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள்: டயட்டீஷியன் லீமா மகாராஜின் வழிகாட்டுதல்!
நாவல் கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 May 2025 20:29 PM IST

நாவல் பழம் என்பது ஊட்டச்சத்து மிகுந்த, கருப்பு அல்லது ஊதா நிறத்தில் காணப்படும் ஒரு பருவக்கால பழமாகும். இது முக்கியமாக மே முதல் ஜூலை மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தியாவில் பெரும்பாலும் தமிழகத்தில் இது அதிகமாக காணப்படும். இப்பழம் இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும் தனிச்சுவையுடன் வியக்கத்தக்க வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நாவல் பழம் மட்டுமல்ல, அதன் கொட்டைகளிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. டயட்டீஷியன் லீமா மகாராஜ், நாவல் கொட்டைகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய முக்கிய ஆரோக்கிய பலன்களைப் பற்றி விளக்குகிறார். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்தாகச் செயல்படுகிறது.

நாவல் கொட்டையின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்

டயட்டீஷியன் லீமா மகாராஜின் வழிகாட்டுதலின்படி, நாவல் பழத்தை தினசரி உணவில் சேர்க்கும் பழக்கம், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். அவரது ஆலோசனைகளின்படி, இந்த பழம் ஒரு இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடென்ட் மூலிகை என்றும், டையபீட்டிக் நோயாளிகள் காலை உணவுக்கு பிறகு ஒரு சிறிய அளவில் சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது.

நாவல் கொட்டைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. குறிப்பாக, இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சித்த மருத்துவத்தில் நாவல் கொட்டைகள் நீரிழிவு நோய்க்கான முக்கியமான மருந்துகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. டாக்டர் லீமா மகாராஜ் கூற்றுப்படி, இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இன்சுலின் உணர்திறனையும் சீராக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

நாவல் கொட்டைகளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.

சேகரிப்பு: நாவல் பழக் கொட்டைகளை நன்கு கழுவி, ஈரமில்லாமல் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொடியாக்குதல்: உலர்ந்த கொட்டைகளை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளிலும் நாவல் கொட்டைப் பொடி கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை: தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் நாவல் கொட்டைப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் உடலில் பல நல்ல மாற்றங்களை உணரலாம்.

நாவல் கொட்டையின் பிற ஆரோக்கிய பலன்கள்

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: நாவல் கொட்டைப் பொடி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது, நீரிழிவு மேலாண்மைக்கு சிறந்தது.

செரிமான மேம்பாடு: இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: நாவல் கொட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

பொது ஆரோக்கியம்: ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கும்.
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காகவே. உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil News பொறுப்பேற்காது.)