Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Spine Health: கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கி பாருங்க.. முதுகுவலி இனி இருக்காது!

Improve Sleep and Reduce Back Pain: கால்களுக்கு இடையில் தலையணை வைத்து தூங்குவது முதுகுவலி மற்றும் முதுகெலும்பு பிரச்சனைகளைக் குறைக்க உதவும். இது முதுகெலும்புக்கு இயற்கையான ஆதரவை அளித்து, தசைகளைத் தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கால்களில் வீக்கம் மற்றும் சோர்வைக் குறைக்கிறது.

Spine Health: கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கி பாருங்க.. முதுகுவலி இனி இருக்காது!
சிறந்த தூக்கம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2025 15:55 PM

இன்றைய நவீன வாழ்க்கையில், பெரும்பாலான மக்கள் முதுகுவலி (Back Pain), சோர்வு அல்லது முதுகுத்தண்டு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். பல நேரங்களில், இதற்காக நாம் விலையுயர்ந்த மருந்துகள் அல்லது சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், இது போதுமான பலனை தராது. இதற்கு காரணம், நாம் தூக்கப் பழக்கத்தில் கவனம் செலுத்தாததுதான். உங்கள் கால்களுக்குக் கீழே தலையணை (Pillow) வைத்து தூங்குவது போன்ற ஒரு சிறிய பழக்கம் உங்கள் முதுகெலும்புக்கு (Spine Health) சிறந்த ஆதரவை அளித்து காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு உதவி செய்கிறது. இந்தப் பழக்கம் முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் அதன் நன்மைகள் ஏராளம் என்று உங்களுக்கு தெரியுமா..?

நாம் முதுகுப்புறம் அழுத்தி தூங்கும் அதேநேரத்தில், முழங்கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைக்கும்போது, நமது முதுகெலும்பு அதன் இயற்கையான வடிவத்தில் ஆதரிக்கப்படுகிறது. பொதுவாக, ஆதரவு இல்லாமல் தூங்குவது நமது கீழ் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது வலி அல்லது முதுகு விறைப்பை ஏற்படுத்தும். ஆனால் தலையணையால் வழங்கப்படும் சிறிது உயரம் நமது முதுகெலும்பை சமநிலையில் வைத்திருக்கிறது. மேலும், நமது கீழ் முதுகில் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முதுகுவலி வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

ALSO READ: 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா? இதய நோய், புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

கால்களுக்குக் கீழே, குறிப்பாக முழங்கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குவது நன்மை பயக்கும் என்று எலும்பியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். கால்களை சற்று உயரமாக வைத்திருக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். குறிப்பாக நாள் முழுவதும் நின்று வேலை செய்பவரோ அல்லது நடந்து செய்பவர்களோ கால்களில் வீக்கம் அல்லது கனமான உணர்வு ஏற்படும். இப்படி, கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கும்போது இவை படிப்படியாகக் குறையத் தொடங்கும். அதேபோல், இப்படி தூங்குவதன்மூலம் வெரிகோஸ் வெயின்கள், கால்களில் சோர்வு மற்றும் கால்களில் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும். சரியான இரத்த ஓட்டம் காரணமாக, உடலுக்கும் நிவாரணம் கிடைக்கிறது, மேலும் இதயத்தில் அதிக அழுத்தம் இருக்காது.

இரவு முழுவதும் தசைகள் தளர்வாக இருக்கும்:

முதுகு வலி மற்றும் பிற முதுகெலும்பு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு, கால்கள் கீழே அல்லது முழங்கால்களுக்கு நடுவே ஒரு தலையணையை வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது முதுகெலும்பில் அழுத்தம் கொடுக்காது மற்றும் உடலின் தசைகள் இரவு முழுவதும் தளர்வாக இருக்கும். இப்படி தூங்குபவர்களுக்கு இந்த நிலை மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இரண்டு கால்களுக்கும் நடுவே ஒரு தலையணையை வைப்பது இடுப்பு மற்றும் முதுகெலும்பை நேர்கோட்டில் வைத்திருக்க உதவி செய்யும்.

லேசான, மென்மையான தலையணை:

இப்படியாக தூங்கும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தலையணை மிக உயரமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்கூடாது. லேசான, மென்மையான தலையணையை தேர்வு செய்வது நல்லது. தலையணையின் உயரத்தை பொறுத்தே முழங்கால்களுக்கு கீழே வைக்கும்போது  ஆழ்ந்த தூக்கத்தை தரும். அதேநேரத்தில், இது கீழ் முதுகு மற்றும் முதுகெலும்புக்கு நிம்மதியை அளிக்கிறது.

ALSO READ: காலையில் புத்துணர்ச்சியுடன் எழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்..!

தூக்கம் மற்றும் உடல் இரண்டிற்கும் ஆறுதல்:

மருந்து இல்லாமல் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கால் சோர்வைக் குறைக்கவும், உங்கள் தூக்கம் நன்றாக இருக்கவும் உங்கள் கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைத்து தூங்க முயற்சிக்கவும். இப்படியான எளிய செயல்முறைகள் உங்கள் தூக்கத்திற்கும் உடலுக்கும் புதிய நிவாரணத்தை அளிக்கும்.