AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா? இதய நோய், புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Sleep & Health Study : தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்பப் பழக்கங்கள் காரணமாக தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இது வெறும் சோர்வை மட்டுமல்லாமல், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் மூளை பாதிப்பு போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.

5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா? இதய நோய், புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jul 2025 22:29 PM IST

இன்றைய வாழ்க்கை முறையாலும் (Lifestyle), தொழில்நுட்பத்தின் விளைவுகளாலும் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இது வெறும் சோர்வை ஏற்படுத்துவதில்லை. இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் கடுமையான ஆபத்தாக மாறி வருகிறது. போதுமான தூக்கம் (Sleep) இல்லாமல் இருப்பது, பிற்காலத்தில் இதய நோய், மன அழுத்தம் மற்றும் மூளை பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. வேலைப் பதற்றம், மாறிய வாழ்க்கை முறை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, மொபைல் போன் பயன்பாடு போன்ற காரணங்களால் பலருக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. இது நமக்கு சோர்வை மட்டும் ஏற்படுத்துவதில்லை. உடலில் பல பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

உயிருக்கு ஆபத்து

நம் உடல் சரியாக செயல்பட, ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம். ஆனால் சிலர் 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார்கள். இது மெதுவாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நீண்ட நேரம் தூக்கம் இல்லாததால் இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு, இது ஆயுட்காலம் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிக்க : செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும் 5 மோசமான பழக்கங்கள்…

உடல்நலப் பிரச்னைகள்

போதுமான தூக்கம் கிடைக்காதவர்கள் உயர் இரத்த அழுத்தம்,  இதயத் துடிப்பு அதிகரிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இன்சுலின் உணர்திறன் குறைவதால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, மக்கள் அதிகமாக சாப்பிடுவதற்கும் இறுதியில் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகிறது. இது மற்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது.

மூளை செயல்பாட்டில் பாதிப்பு

போதுமான தூக்கம் இல்லாமல், முடிவெடுக்கும் திறன்,  நினைவாற்றல் வெகுவாகக் குறைகிறது. இது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலையிலும் தவறுகளுக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட தூக்கமின்மை மூளை பலவீனம் மற்றும் மன பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்க : தினமும் உங்களுக்கு விக்கலால் தொல்லையா..? ஏன் ஏற்படுகிறது? தடுக்க இதை செய்யலாம்!

புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதா?

ஆராய்ச்சியின் படி, போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவும். குறிப்பாக சில புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க இருதயவியல் கல்லூரியின் ஆராய்ச்சியின் படி, நல்ல தூக்கக் கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுக்கு எந்த வகையான மரணத்திற்கும் 30 சதவீதம் குறைவான ஆபத்து உள்ளது. இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் 21 சதவீதம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், மற்ற ஆய்வுகள் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இறப்பு ஆபத்து 15 சதவீதம் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளன. எனவே, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் அவசியம்.

Follow Us