Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Cross Legged Sitting: கால் மேல் கால் போட்டு உட்காருவீர்களா? கால் முதல் முதுகு வரை வலி கன்பார்ம்!

Impact on Spine and Posture: கால்களைக் குறுக்காகப் போடுவதும் தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது முதுகு, இடுப்பு மற்றும் முதுகெலும்பில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மோசமான தோரணை, முதுகுவலி அல்லது இடுப்பு வலியை அதிகரிக்க வழிவகுக்க செய்யும்.

Cross Legged Sitting: கால் மேல் கால் போட்டு உட்காருவீர்களா? கால் முதல் முதுகு வரை வலி கன்பார்ம்!
கால் குறுக்கே போட்டு அமருதல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jan 2026 17:20 PM IST

இன்றைய நவீன வாழ்க்கையில் பலரும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலையை செய்கிறோம். இதனால், வேலை பார்க்கும் நேரத்தில் சரியான நிலையில் உட்காருகிறோமா என்பதை கவனித்து கொள்ளாமல் முறையற்ற முறையில் உட்காருகிறோம். இதனால் முதுகுவலி (Back pain), கழுத்து வலி மற்றும் மூட்டு வலி (Joint Pain) போன்ற பிரச்சனையை சந்திக்கிறார்கள். அதேபோல், பலரும் கால்களை தொடர்ந்து அசைப்பது, கால் மேல் கால் போட்டு அமர்ந்து உட்காருகிறார்கள். அந்தவகையில், நீங்கள் தொடர்ந்து கால்களைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு உட்காருகிறீர்களா? தொடர்ந்து கால்களைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு உட்காருவது உடலில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

ALSO READ: அதிகப்படியான உடற்பயிற்சி இதயத்திற்கு ஆபத்தானதா? உண்மை என்ன..?

கால்களை ஏன் குறுக்காக வைத்து உட்காரக்கூடாது..?

கால்களைக் குறுக்காக வைத்து உட்காருவது சரியான இரத்த ஓட்டத்தை அனுமதிக்காது. இது கால்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இந்த நிலை நரம்பு சுருக்க அபாயத்தை அதிகரிக்கிறது. இது பெரோனியல் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி காலில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.

கால்களைக் குறுக்காகப் போடுவதும் தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது முதுகு, இடுப்பு மற்றும் முதுகெலும்பில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மோசமான தோரணை, முதுகுவலி அல்லது இடுப்பு வலியை அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும், இந்த உட்கார்ந்த நிலை இடுப்பு மற்றும் தொடைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தசை ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். வெரிகோஸ் வெயின்ஸ் உள்ளவர்களுக்கு, இந்தப் பழக்கம் பிரச்சனையை அதிகப்படுத்தும். எனவே, உங்கள் கால்களை நேராக வைத்து உட்காருவது, அவ்வப்போது நிற்கும்போது நடப்பது மற்றும் குனிந்து நிமிருவது செய்வது மிகவும் பொருத்தமானது.

இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கும்:

ஒரு காலை மற்றொன்றின் மேல் குறுக்காக வைத்து உட்காருவது இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இதனால், ஒரு காலை மற்றொன்றின் மேல் குறுக்காக போடும்போது, கீழ் காலுக்கு செல்லும் நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது இரத்த கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது. இது கால் பிரச்சனையை அதிகரிக்கும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை:

தொடர்ந்து கால்களை குறுக்காக போட்டு உட்காருவது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இது இதயத்தை வேகமாக இரத்தத்தை பம்ப் செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

ALSO READ: மாரடைப்பு, பக்கவாதம் வருமோ என்ற பயமா..? இந்த 3 எளிய குறிப்புகள் வராமல் தடுக்கும்!

கால் மேல் கால் போட்டு உட்காருவதும் கழுத்தை பாதிக்கிறது. மேலும், இடுப்பு மற்றும் கீழ் முதுகு வளைவதற்கு வழிவகுக்கும். ஆராய்ச்சியின்படி, குறுக்காக கால் போட்டு உட்காருவதும் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். விந்தணுக்களின் வெப்பநிலை இயல்பை விட 2-6 டிகிரி அதிகரிக்கிறது. இது விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கும்.