Trisha : ‘ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விருப்பப்படவில்லை’- திரிஷா சொன்ன தகவல்

Trisha About Her Cinema Entry : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், ஆரம்பத்தில் சினிமாவில் நுழைய விருப்பமில்லாதது பற்றிப் பேசியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Trisha : ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விருப்பப்படவில்லை- திரிஷா சொன்ன தகவல்

திரிஷா கிருஷ்ணன்

Published: 

24 Jun 2025 08:54 AM

தென்னிந்திய சினிமாவில் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாகக் கலக்கி வருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay)  முதல் பிரபாஸ் (Prabhas) வரை முன்னணி ஹிட் நடிகர்களுக்கு ஜோடியாகப் படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகையாக நுழைந்து, பின் கதாநாயகியாகப் பிரபலமானவர் இவர். சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே  (Mounam Pesiyadhe ) என்ற படத்தில் கதாநாயகியாக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான அமீர் (Ameer) இயக்கியிருந்தார். கடந்த 2002 ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக வலம்வரத் தொடங்கினார் திரிஷா கிருஷ்ணன். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் சினிமாவில் சுமார் 22 வருடகாலமாக முன்னணி நட்சத்திர நாயகியாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சினிமாவில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ஆர்வமில்லாதது பற்றிப் பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

சினிமாவில் முதலில் ஆர்வமில்லாதது குறித்து த்ரிஷா பேச்சு :

நடிகை திரிஷா முன்னதாக பேசிய நேர்காணலில் அவரிடம், நீங்கள் ஆரம்பத்தில் மாடலிங் பண்ணும்போது சினிமாவில் நுழைய விருப்பமில்லை என்று பேசியிருக்கிறீர்கள், அந்த பின் எவ்வாறு சினிமாவில் நுழைந்தீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை திரிஷா கிருஷ்ணன், “நான் மாடலிங்கில் இருக்கும்போது நிறையவே சொல்லியிருக்கிறேன், சினிமாவில் கண்டிப்பாக நுழைய மாட்டேன் , அதற்கு எனக்கு செட் ஆகாது என நான் கூறியிருக்கிறேன். அதன் பிறகு எனக்கு என்ன வேண்டும், என்ன தேவை என்று எனக்கு 100 சதவீதம் தெரியவில்லை. நான் திரைப்படத்தில் நடிக்கவேண்டுமா?, இல்லை எனது படிப்பை தொடரவேண்டுமா? என்ற குழப்பத்தில்தான் நான் இருந்தேன்.

மேலும் நானும் எனது படிப்பை முடித்ததும் சினிமாவில் நுழையவேண்டும் என்றுதான் நினைத்தேன். அதைப்போல் படிப்பை முடித்தேன் பின்னும் சினிமாவில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். எனக்கு சினிமாவில் வரவேண்டாம் என்று ஆசை இல்லை, எனது படிப்பிற்காக மட்டும்தான் அதை ஒத்திவைத்தேன். ஆசை இருந்தது அதனால்தான் சினிமாவில் வந்தேன், மேலும் நடிப்பதை ஒதுக்கி வைத்திருந்தால் எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்திருக்கும் என்று நடிகை திரிஷா ஓபனாக பேசியிருநதார்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் இந்த நேர்காணலில் தனது சினிமா நடிப்பு ஆசை மற்றும் சினிமாவின் நுழைவிற்காகக் காரணத்தைப் பற்றியும் தெளிவாகப் பேசியிருந்தார். அதில் சினிமாவில் நுழைய வேண்டாம் என்பது எனது ஆசை அல்ல , சினிமாவில் நுழையவிட்டால்தான் நான் குற்றவுணர்வோடு இருந்திருப்பேன் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.