மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு.. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றி, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் தொடக்கக் கால அமைச்சரவையில் பாஜகவின் முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு.. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்!

சுவேந்து அதிகாரி பதவியேற்பு

Published: 

09 May 2026 13:02 PM

 IST

கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருந்து மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால அதிரடி அரசியல் வரை, பல போராட்டங்களைக் கண்ட மேற்கு வங்க தேர்தல் வரலாற்றில், முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று அக்கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். தன் வாழ்நாள் முழுவதும், அல்லது குறைந்தபட்சம் தனது அரசியல் வாழ்க்கையிலாவது இந்த ஒரு நாளுக்காகத்தான் சுவேந்து அதிகாரி காத்திருந்திருப்பார். ஒரு காலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக சுவேந்து அதிகாரி பணியாற்றினார்.

இதையும் படிக்க: பாஜகவின் வரலாற்றுத் தொடக்கம்.. மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுவேந்து அதிகாரி?

முதல்வர் நாற்காலியில் சுவேந்து அதிகாரி:

காலச்சக்கரம் சுழன்றதில், இன்று தான் யாருக்கு உதவியாளராக இருந்தாரோ, அதே நபர் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று சுவேந்து அதிகாரி அமர்ந்துள்ளார். வங்காள அரசியலில் சுவேந்து அதிகாரியின் இந்த வளர்ச்சி ஒரு சினிமா பாணியிலான திருப்பங்களைக் கொண்டது. தோற்கடிக்கப்பட்ட ஒரு முதலமைச்சரின் உதவியாளர், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த வழிகாட்டி, நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் வாக்காளர்களின் நாயகன் எனப் பல முகங்களைக் கொண்டவர் அவர். நீதிக்காகத் திரும்பி வந்த ஒரு ரோமானிய தளபதியைப் போல அவரது அரசியல் எழுச்சி அமைந்துள்ளது.

பாஜகவின் கனவு நனவான நாள்:

இன்று சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட வெற்றி நாள் மட்டுமல்ல, பாஜக நீண்ட காலக் கனவு நனவான நாளுமாகும். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டது, வங்காளத்தின் அரசியல் விதியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளான இன்று, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், தற்போதைய ஆளுநருமான ஆர்.என்.ரவி, சுவேந்து அதிகாரிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு:

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றி, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சுவேந்து அதிகாரியின் தொடக்கக் கால அமைச்சரவையில் பாஜகவின் முக்கிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்தத் தேர்வு அமைந்துள்ளது. திலீப் கோஷ்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (OBC) சேர்ந்தவர்; 2014-க்குப் பிறகு பாஜகவின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தியவர். அக்னிமித்ரா பால் காயஸ்த் (Kayast) சமூகத்தைச் சேர்ந்தவர்; 2019-ல் இணைந்ததிலிருந்து பாஜகவின் முக்கியப் பெண் ஆளுமையாகத் திகழ்கிறார்.

இதையும் படிக்க: மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?

அசோக் கிர்தானியா: தெற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான ‘மத்துவா’ (Matua) சமூகத்தின் பிரதிநிதி/ க்ஷுதிராம் துடு: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராணிபந்த் தொகுதியின் பிரதிநிதி; மேற்கு வங்கத்தின் பழங்குடி மக்களிடையே பாஜகவை கொண்டு சென்றவர். நிசித் பிரமானிக்: ராஜ்வன்ஷி (Rajbonshi) சமூகத்தைச் சேர்ந்தவர்; இளைஞர்களிடையே பெரும் செல்வாக்கு கொண்டவர்.

வங்காளத்தின் அரசியல் பாதையை மாற்றியமைத்துள்ள இந்த புதிய அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதை இனி வரும் காலம் சொல்லும்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி