Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி ஏடிஎம் தேவையில்லை… ஈஸியா பணம் எடுக்கலாம் – எப்படி தெரியுமா?

Digital Banking : யுபிஐயின் வருகைக்கு பிறகு இந்தியாவில் பணப்பரிமாற்ற முறையில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. சிறிய கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்க முடியும். ஏடிஎம் இல்லாமல் QR கோட் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இனி ஏடிஎம் தேவையில்லை… ஈஸியா பணம் எடுக்கலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Sep 2025 21:02 PM IST

இந்தியாவில் டிஜிட்டல் அம்சங்களின் தன்மை மாறி வருகிறது. யுபிஐ (UPI) கட்டண முறையிலும் அதன் பயன்பாட்டின் நோக்கத்திலும் முன்னேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைனில் பணம் செலுத்த யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. இப்போது யுபிஐ மூலம் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படும். வங்கிகளில் யுபிஐ பயன்பாட்டிலிருந்து கியூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யுபிஐயின் வருகைக்கு பிறகு இந்தியாவில் பணம் பரிமாற்ற முறையில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. அருகில் உள்ள சிறிய கடைகளில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்க வேண்டாம். இதனால் கடைகளில் சில்லறை தட்டுப்பாடு முற்றிலும் குறைந்தது. தற்போது பேருந்துகளில் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கலாம்.

இதையும் படிக்க : இனி ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.. வந்தது அதிரடி மாற்றங்கள்!

யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி

மொபைல் போன்களில் இருந்து QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியை அனுமதிக்குமாறு NPCI ரிசர்வ் வங்கியிடம் கோரியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வங்கிகளின் கிளைகளில் இந்த வசதியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இதுபோன்ற வங்கி கிளைகளில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, நாடு முழுவதும் 20 லட்சம் வங்கிகள் உள்ளன. இவை அனைத்திலும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டால், கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

ஏடிஎம் வசதி இல்லாத இடங்களில் பயன்படும் திட்டம்

தற்போது, ​​நாட்டில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஏடிஎம்களில் மட்டுமே யுபிஐ பணம் எடுக்கும் வசதி உள்ளது. இது தவிர, ஆதார் கைரேகை மூலம் பணம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இரண்டு அமைப்புகளிலும் வரம்பு உள்ளது. யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து நகரங்களில் ரூ.1,000 வரை எடுக்கலாம். கிராமப்புறங்களில், ரூ.2,000 வரை எடுக்கலாம். இதில் பிரச்னை என்னவென்றால் பயோமெட்ரிக் அங்கீகாரம் சில நேரங்களில் வேலை செய்யாமல் போகலாம்.

இதையும் படிக்க : போன் எண்ணை சரிபார்க்கும் யுபிஐ மற்றும் வங்கிகள் – காரணம் என்ன தெரியுமா?

தேசிய கொடுப்பனவு கழகத்தின் தற்போதைய திட்டத்தின்படி, வங்கிகளின்  கிளை அலுவலகங்களில் வைக்கப்படும் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஒரு நேரத்தில் ரூ.10,000 எடுக்க வேண்டும். ஒரு பரிவர்த்தனையிலிருந்து மற்றொரு பரிவர்த்தனைக்கு 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.

இந்த  கியூஆர் குறியீடு அமைப்பு, தங்கள் ஏடிஎம் கார்டு மறந்துவிட்டவர்களுக்கும், அல்லது அட்டை இல்லாதவர்களுக்கும், அருகில் ஏடிஎம்கள் இல்லாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.