AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20, 000 வருமானம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Secure Retirement Income Plan : ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. ஓய்வுக்குப் பிறகு எந்த ஆபத்தும் இல்லாமல் தங்கள் சேமிப்பில் நிலையான மாத வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20, 000 வருமானம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2025 21:10 PM IST

ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் இருந்தால் வாழ்க்கை மிகவும் அமைதியானதாகத் தோன்றும். இதுபோன்ற சமயங்களில், பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் திட்டங்கள் மிகவும் முக்கியமானதாகின்றன. தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) என்பது ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது நல்ல வட்டி விகிதத்தை வழங்குவது மட்டுமல்லாமல் வரி சேமிப்பு மற்றும் நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது. ஓய்வுக்குப் (Retirement) பிறகு எந்த ஆபத்தும் இல்லாமல் தங்கள் சேமிப்பில் நிலையான மாத வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

SCSS என்பது தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமாகும். இது ஒரு பாதுகாப்பான சேமிப்புத் திட்டம். இது தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலான வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை விட அதிகம். நீங்கள் இதை வெறும் 1,000 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். மேலும் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

யார் முதலீடு செய்யலாம்?

  • 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • ஒரு அரசு ஊழியர் 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றால், அவரும் தகுதியுடையவர்.
  • 50 முதல் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் முதலீடு செய்யலாம்.
  • உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம்.

இதையும் படிக்க : பிஎம் கிசான் 20வது தவணை குறித்து வெளியான முக்கிய தகவல்.. உடனே இத பண்ணுங்க!

இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்தால், அவருக்கு சுமார்  ஒவ்வொரு ஆண்டும் 2.46 லட்சம் கிடைக்கும். இந்தப் பணம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் பொருள் வழக்கமான வருமானம் சுமார் ரூ. 20,500 மாதம் வருமானம் பெறலாம். அதே போல ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்தால், வட்டி உட்பட மொத்த வருமானம் ஐந்து ஆண்டுகளில்  ரூ.28.2 லட்சமாக இருக்கும்.. இந்தக் காலகட்டத்தில், வருமானம் தோராயமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.41,000 வருமானம் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாதம் ரூ. 13,666 லாபம் கிடைக்கும்.    வருமான வரிச்சட்டம் பிரிவு 80C இன் கீழ் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

இதையும் படிக்க : 45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!

இந்த திட்டத்தின் விதிகள்

இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்குரியது. இதை மேலும்  3 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு கணக்கை மூடிவிட்டால், வட்டி எதுவும் வழங்கப்படாது. மேலும் 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் மூடப்பட்டால், வட்டி 1% குறைக்கப்படும்.

அரசின் உத்தரவாதம், நல்ல வட்டி விகிதங்கள், வரி சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகியவை SCSS ஐ ஓய்வு பெற்றவர்களுக்கு நம்பகமான மற்றும் லாபகரமான விருப்பமாக மாற்றுகின்றன. ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வேண்டுமென்றால் இது உங்களுக்குச் சிறந்த வழியாக இருக்கும்.

Follow Us