வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள் – எச்சரிக்கும் ஆர்பிஐ – என்ன செய்ய வேண்டும்?

RBI Warns Extra Interest : இந்தியாவில் தற்போது பெர்சனல் லோன் எளிதாக கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வட்டியில் இருந்து உடனடியாக மாற்றம் செய்வதில்லை. இந்த நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் தவறான முறைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கின்றன என ரிசர்வ் வங்கி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள் - எச்சரிக்கும் ஆர்பிஐ - என்ன செய்ய வேண்டும்?

இந்திய ரிசர்வ் வங்கி

Updated On: 

29 May 2025 17:42 PM

இந்தியாவில் (India) ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் பர்சனல் லோன் (Personal Loan) வழங்கி வருகின்றன. இதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) ஏகப்பட்ட லோன் ஆப்கள் கிடைக்கின்றன. அவற்றில் நம் விவரங்களை அளித்தவுடன் சில விநாடிகளில் நமக்கு கடன் தொகை கிடைத்து விடுகிறது. கடன் வாங்குவது இன்று மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வட்டி செலுத்துகிறீர்களா? அதற்கான காரணம் உங்கள் வங்கியின் நடைமுறைகளாக இருக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சமீபத்தில் வங்கிகள் கடன் வட்டி குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஃப்ளோட்டிங் ரேட் லோன்கள் (floating rate loans) என்ற வகையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படும் முக்கிய வழிகளை ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கூடுதல் வட்டி விகிதங்கள்

வங்கிகள் பொதுவாக எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட் (External Benchmark Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன.  எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட் என்பது வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதங்களை வெளிப்புற அளவுகோல் அடிப்படையில் நிர்ணயிக்கும் ஒரு முறை. அதாவது ரெப்போ வட்டி விகிதம், அரசு கடன் பத்திர விகிதம், குறைந்த கால கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு கடன்களின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும். இது எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதால் ஒரே மாதிரியான கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கே வெவ்வேறு வட்டிகள் விதிக்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால், வங்கிகள் அதை உடனடியாக அமல்படுத்த தாமதம் செய்கின்றன. ஆனால், வட்டி உயர்ந்தால் உடனடியாக அதிக வட்டி வசூலிக்கின்றன. ரிசர்வ் வங்கி வட்டி அறிவிப்புகளை கவனிக்கவும். வட்டி மாற்றம் தாமதமானால், பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம்  (Balance Transfer) மூலமாக வேறு வங்கிக்கு மாற்றி கொள்ளலாம்.

 புதிய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி

ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தால் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன.  அதை நேரம் பழைய வாடிக்கையாளர்களிடம் அந்த வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய தவறுகின்றன.  உங்கள் கடன் திட்டத்தில் தற்போதைய வட்டி என்ன என்பதை அறியவும். புதிய வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டியை நிர்ணயித்தால், அதை உங்கள் கடனுக்கும் நிர்ணயிக்க சொல்லுங்கள். சில வங்கிகள் அதற்கு கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் நீண்ட கால பார்த்தால் அது உங்களுக்கு சேமிப்பை வழங்கும்.

ஃப்ளோட்டிங் ரேட் கடன்களில், வங்கி ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வட்டி விகிதத்தை மறுஅமலாக்கம் செய்கின்றன. இதனால் வட்டி குறைந்தாலும், நீங்கள் உடனே அதற்கான நன்மை பெற முடியாது.  உங்கள் கடனுக்கான வட்டி மாற்றம் எப்பொழுது எல்லாம் நடக்கிறது என பாருங்கள். உங்கள் வங்கி வழங்கவில்லை என்றால் வேறு வங்கிக்கு மாற்றவும்.