ஆபரேஷன் எபிக் ப்யூரி.. முதல் ஒரு மணி நேரம்.. ஈரான் போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
Donald Trump : ஈரானுக்கு எதிரான தற்போதைய போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார், ஆனால் பணி முழுமையாக முடியும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.புதன்கிழமை கென்டக்கியில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிரம்ப் இதனை தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக கூட்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாளிலிருந்து மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்த போர் குறித்து பேசிய ட்ரம்ப், “வேலை முடியும் வரை நாங்கள் வெளியேறப் போவதில்லை. அது மிக விரைவில் நடக்கும்,” என்றார். மேலும், இந்த மோதலில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான நன்மையைப் பெற்றுள்ளது, ஆனால் வெற்றியை இப்போதே அறிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆட்டம் முடிந்தது
மேலும் மேற்கு ஆசியா போர் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப் “நாம் ஜெயித்துவிட்டோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், நாம் வென்றோம். உங்களுக்குத் தெரியும், இவ்வளவு சீக்கிரம் வெற்றியை அறிவிப்பது ஒருபோதும் நல்ல யோசனையல்ல. ஆட்டம் முதல் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது. பயணம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சில தீய, மிகவும் தீய மக்களை ஒழிக்க நாம் ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த 47 ஆண்டுகளாக, ஈரான் அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கவும், பிராந்தியத்தை சீர்குலைக்கவும் முயற்சித்து வருகிறது. அவர்கள் எங்கள் மக்களைக் கொன்று கொண்டிருந்தனர் . அவர்கள் முழு மத்திய கிழக்கையும் கைப்பற்ற முயன்றனர். அவர்கள் இஸ்ரேலை தோற்கடிக்க விரும்பினர். அவர்கள் மீது என்ன நடக்கப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. அவர்கள் அமெரிக்க இராணுவத்தால் தாக்கப்படுவதை உணரவில்லை. இதுபோன்ற எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.
வீடியோ
#WATCH | US President Donald Trump says, “We take decisive action to stop the threat posed by the terrorist regime in Iran with Operation Epic Fury. Is that a great name? Well, it’s only good if you win… And we’ve won… You never like to say too early that you’ve won… We… pic.twitter.com/VJ8XjZs31o
— ANI (@ANI) March 11, 2026
எங்கள் இராணுவம் ஈரானை முற்றிலுமாக அழித்துவிட்டது
கடந்த 11 நாட்களில், எங்கள் இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழித்துவிட்டது; அது ஒரு கடினமான நாடு. இந்த இராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்கப் படைகள் 58 ஈரானிய கடற்படைக் கப்பல்களை அழித்ததாகவும் அவர் கூறினார்.
Also Read : ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியது ஏன்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்!
ஆபரேஷன் எபிக் ப்யூரி எப்படிப் பெயரிடப்பட்டது
ஈரானைத் தாக்கும் நடவடிக்கையின் பெயரைத் தான் எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பதையும் டிரம்ப் விளக்கினார். இந்த நடவடிக்கைக்கான பெயரைத் தானே தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார். அமெரிக்க இராணுவ அதிகாரிகள் சுமார் 20 சாத்தியமான பெயர்களின் பட்டியலை தனக்கு வழங்கியதாகவும், அவற்றில் எபிக் ஃப்யூரி மிகவும் பொருத்தமானது என்றும் அவர் விளக்கினார். “மற்ற பெயர்கள் எனக்குப் பிடிக்கவில்லை,” என்று டிரம்ப் கூறினார்