AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூடலூரில் சோகம்: சலூன் சென்று திரும்பிய 12 வயது சிறுவனை அடித்துக் கொன்ற ஒற்றை யானை!

Wild Elephant Attack: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த மே 26 அன்று சலூனுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் நிஷாபுவை, ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் சந்தித்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. இதில் சிறுவன் உயிரிந்தான்.

கூடலூரில் சோகம்: சலூன் சென்று திரும்பிய 12 வயது சிறுவனை அடித்துக் கொன்ற ஒற்றை யானை!
சிறுவன் உயிரிழப்பு
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 May 2026 09:30 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து தொடர் நடமாட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கூடலூர் பகுதியில் நேற்று மாலை வழக்கம் போல பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியும் அச்சமும் அடைந்தனர்.

சலூன் சென்று திரும்பியபோது நேர்ந்த விபரீதம்

கூடலூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிஷாபு, நேற்று மாலை தன் வீட்டின் அருகே உள்ள ஒரு சலூனுக்கு முடி திருத்துவதற்காகச் சென்றுள்ளான். சலூனில் தனது வேலையை முடித்துக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு மீண்டும் தனது வீட்டிற்கு நோக்கி சிறுவன் நிஷாபு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, காட்டில் இருந்து வெளியேறி அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த ஒற்றைக் காட்டு யானையின் முன்பு சிறுவன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் சிக்கிக் கொண்டான். கண் இமைக்கும் நேரத்தில் அந்த காட்டு யானை சிறுவன் நிஷாபுவை மிகக் கொடூரமான முறையில் தாக்கியது. யானையின் பலத்த தாக்குதலில் சிறுவன் உடல் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினான்.

சிகிச்சை பலனின்றி துடிதுடித்த உயிரிழப்பு

யானை தாக்கி சிறுவன் அலறும் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவன் நிஷாபுவை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், உடலில் ஏற்பட்டிருந்த கடுமையான உள் காயங்கள் மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக, சிகிச்சை பலனின்றி சிறுவன் நிஷாபு பரிதாபமாக உயிரிழந்தான்.

Also Read: பழைய பகைக்கு பழி தீர்ப்பு.. மதுரையில் பதறவைத்த சிறுவன் கொலை.. 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்!

சிறுவனுக்கு நடந்த துயரம் மற்றும் கோரிக்கை

இந்த நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம் கடந்த 2026 மே 26 அன்று கூடலூர் பகுதியில் அரங்கேறியுள்ளது. 12 வயது சிறுவன் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோக அலையையும், மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us