2 நாள் விடுமுறை… போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
TNSTC Special Buses : வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2025 செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழக போக்குவரத்து கழகம்
சென்னை, செப்டம்பர் 11 : வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வார இறுதிகள் நாட்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுககு மக்கள் செல்வது வக்கம். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்கிளல் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்து கழகம் வார வாரம் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேலும், எந்தெந்த ஊருக்கு எத்தனை பேருந்துகள் போன்ற விவரங்களை வாரந்தோறும் தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 2025 செப்டம்பர் 13 சனிக்கிழமை, 2025 செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை வருகிறது. இதனால், தமிழக போக்குவரத்து கழகம் வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன், கூடுதல் பேருந்துகளைபோக்குவரத்து கழகம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Also Read : கராத்தே கிளாஸ் வந்த மாணவிகளின் அம்மா டார்கெட்.. சிக்கிய மாஸ்டர்!
போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation… pic.twitter.com/8a5spIFaWo
— ArasuBus (@arasubus) September 10, 2025
அதன்படி, 2025 செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் 355 பேருந்துகளும், 2025 செப்டம்பர் 13ஆம் தேதி 350 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2025 செப்டம்பர் 12ஆம் தேதி திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 13ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்ளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read : பயணிகளுக்கு குட் நியூஸ்.. மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் புதிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாதவரத்தில் இருந்து 2025 செப்டம்பர் 12,13ஆம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் TNSTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக உங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.