Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சில்லென மாறப்போகும் சென்னை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Weather Report: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையில் இன்று மாலை மழைக்கான வாய்ப்பு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லென மாறப்போகும் சென்னை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 08 May 2025 14:18 PM

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4, 2025 அன்று தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைந்து வந்த நிலையில் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மே 8, 2025 சென்னை முதல் வேலூர் வரை. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மே 8 2025 மற்றும் மே 9 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மே 10,2025 தேதி மற்றும் மே 11,2025 தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு பருவ மழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி துவங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் லேசான முதல் மிதமான மழை அடுத்த ஏழு நாட்களுக்கு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சந்தியூர் சேலம் மாவட்டத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பேச்சிப்பாறை கன்னியாகுமரி மாவட்டம், சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் 8 சென்டிமீட்டர் மழையும், ஓமலூர் சேலம் மாவட்டத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

பிரதீப் ஜான் சொல்வது என்ன?


வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தற்போது வரை தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே 38 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், மே மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை சற்று தணிந்து காணப்படுவதாகும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதன் காரணமாக உஷ்ணம் தணிந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மே 8 2025 ஆன இன்று சென்னை முதல் வேலூர் வரையும் வட தமிழ்நாடு கடலோர பகுதிகள் முதல் டெல்டா வரை வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் வேலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெப்பநிலை என்பது 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் மாலை நேரம் மழைக்கான வாய்ப்பு சாதகமாக இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி...
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை...
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா.....
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்...
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்......
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...