தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… வெளுக்கப்போகுது கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கோவை, தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்... வெளுக்கப்போகுது கனமழை..  எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

மழை

Published: 

14 Jun 2025 06:20 AM

சென்னை, ஜூன் 14 :  தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் (Tamil Nadu Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. அதோடு,  தென் மாவட்டங்களில்  அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சென்னையில் பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, வடக்கு கர்நாடகா தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூன 14ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஜூன் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதி கனமழையும், கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?


2025 ஜூன் 16ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 17ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜூன் 18ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 14ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.