Tamil Nadu Weather Update : அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. சென்னையில் நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்

Chennai Weather Today : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை விவரம் பார்க்கலாம்

Tamil Nadu Weather Update : அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. சென்னையில் நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் மழை

Updated On: 

29 Aug 2025 07:39 AM

சென்னை, ஆகஸ்ட் 29 :  தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக,  நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று கூட, நீலகிரி, கோவையில் கனமழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அடித்து வருகிறது.  இப்படியான சூழலில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை இங்கு பார்ப்போம். 

2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்து, காலை 8.30 மணியளவில் சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Also Read : நீலகிரி டூ கோவை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்

அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கும் மழை


அதாவது, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.