AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈஸ்டர் திருநாள்.. மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு.. ஒரு விரிவான வரலாறு!!

Easter The Resurrection of Jesus: இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஞாயிற்றுக் கிழமையே 'ஈஸ்டர் திருநாள்' அல்லது 'உயிர்ப்பு ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. இது தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும், மரணத்தின் மீது வாழ்வும் பெற்ற வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஈஸ்டர் திருநாள்.. மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு.. ஒரு விரிவான வரலாறு!!
ஈஸ்டர் திருநாள் 2026
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Apr 2026 14:45 PM IST

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவ மக்களால் மிகவும் புனிதமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் ஒரு உன்னதத் திருநாள் ஈஸ்டர் (Easter). இது ‘உயிர்ப்பு ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரணத்தை வென்று, மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வை இந்தத் திருநாள் உலகிற்குப் பறைசாற்றுகிறது.

இதையும் படிக்க: புனித வெள்ளி என்றால் என்ன?.. இயேசுவின் துன்பமும்.. சிலுவை மரணத்தின் பின்னணியும்..

இயேசுவின் போதனைகளும் தியாகமும்:

கிறிஸ்தவ விவிலியத்தின்படி, இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது அன்பு, மன்னிப்பு, மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தார். நோயாளிகளைக் குணமாக்கியும், எளியவர்களுக்கு உதவியும் வந்தார். இருப்பினும், அவரது போதனைகள் அங்கிருந்த சில அதிகார வர்க்கத்தினருக்குப் பிடிக்கவில்லை. மனித குலத்தின் பாவங்களைப் போக்குவதற்காகவும், அவர்களுக்கு நித்திய வாழ்வை அளிப்பதற்காகவும் இயேசு தன்னைத்தானே ஒரு தியாகப் பலியாக ஒப்படைக்க முன்வந்தார். அவர் மீது பொய் வழக்குப் சுமத்தப்பட்டு, முள் முடி சூட்டப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பெரிய வெள்ளி மற்றும் அடக்கம்:

அனைத்துத் துன்பங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்ட இயேசு, இறுதியில் இரண்டு திருடர்களுக்கு மத்தியில் கொல்கொதா என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் தொங்கியபடி, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தனக்குத் துரோகம் செய்தவர்களுக்காகவும் வேண்டினார். அவர் சிலுவையில் உயிர்நீத்த அந்தத் துக்ககரமான நாள் ‘பெரிய வெள்ளி’ (Good Friday) என்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் துக்க நாளாகவும், உபவாச நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது உடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, பாறைகளால் குடையப்பட்ட ஒரு புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. யூத அதிகாரிகளின் உத்தரவுப்படி அந்தக் கல்லறை ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டு, காவலர்களும் நிறுத்தப்பட்டனர்.

மரணத்தை வென்ற உயிர்ப்பு:

இயேசு ஏற்கனவே தனது சீடர்களிடம் கூறியது போல, மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு பெரும் அற்புதம் நிகழ்ந்தது. மரணத்தின் பிடியைத் தகர்த்தெறிந்துவிட்டு இயேசு மீண்டும் உயிர் பெற்றார். அதிகாலையில் இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூசுவதற்காக அவரது சீடரான மரிய மகதலேனா உள்ளிட்ட சில பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. கல்லறையை மூடியிருந்த பெரும் பாறை விலகியிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது இயேசுவின் உடல் அங்கே இல்லை. அப்போது வெண்ணிற ஆடை அணிந்த வானதூதர்கள் அவர்களுக்குத் தோன்றி, “நீங்கள் தேடுகிற நசரேயனாகிய இயேசு இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்” என்ற மகிழ்ச்சியான நற்செய்தியை அறிவித்தனர்.

ஈஸ்டர் திருநாளின் முக்கியத்துவம்:

இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஞாயிற்றுக்கிழமையே ‘ஈஸ்டர் திருநாள்’ அல்லது ‘உயிர்ப்பு ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. இது கிறிஸ்தவ நம்பிக்கையின் மிக முக்கியமான அடிப்படையாகக் கருதப்படுகிறது. இது தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்தின் மீது வாழ்வும் பெற்ற வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையில் வரும் துன்பங்களும் சோதனைகளும் தற்காலிகமானவை, அவற்றுக்குப் பின்னால் ஒரு புதிய விடியல் (உயிர்ப்பு) இருக்கிறது என்ற நம்பிக்கையை இது மனிதகுலத்திற்கு வழங்குகிறது.

இதையும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு அரிய யோகங்கள்.. அதிர்ஷ்டம் வரப்போகும் ராசிகள்!

ஈஸ்டர் கொண்டாட்ட முறைகள்:

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு, தானதர்மங்கள் மற்றும் தீவிர ஜெபங்களுடன் கூடிய ‘தவக்காலத்தை’ (Lent) கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமை இரவு தேவாலயங்களில் ‘பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகள்’ மிகச் சிறப்பாக நடைபெறும். இதில் புதிய நெருப்பு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருளை அகற்றும் ஒளியின் வழிபாடு நடத்தப்படும். பல மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் திருவிழாவின் போது வண்ணமயமான முட்டைகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவருவது போல, கல்லறையிலிருந்து இயேசு புதிய ஜீவனோடு வெளிவந்ததை இது குறிக்கிறது.

Follow Us