Tamil Nadu News Live Updates: PT வகுப்பை ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்
Tamil Nadu Breaking news Today 22 July 2025, Live Updates: சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். “PT period-ல், தயவுசெய்து ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

LIVE NEWS & UPDATES
-
தமிழ்நாடு முதல்வர் கோப்பை – ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு..
விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து விளையாட்டு வீரர்களும் “சாம்பியன் அறக்கட்டளையை” பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
மாணவர்கள் தினமும் விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விடாமுயற்சி முக்கியம் என வலியுறுத்திய அவர், மாணவர்கள் தினமும் விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்றார். தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
கணவர் ஸ்டாலினுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது – மகிழ்ச்சி பொங்க துர்கா ஸ்டாலின் பேச்சு
” மனம் முன் வந்து நீ எழுது துர்கா என்று என் கணவர் சொல்லியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. பேரக்குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது ஒரு பாட்டியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்பு முத்தங்களை பேர குழந்தைகளுக்கு பரிசாக தருகிறேன்” என அவரும் நானும் நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் படிக்க
-
ராமேஸ்வர மீனவர்கள் கைது.. கவலையில் குடும்பத்தினர்..
ராமேஸ்வரம் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சில நேரங்களில் மீனவர்களுக்கு மரியாதையற்ற முறையில் நடத்துகின்றதாகவும், சிலர் துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், மீனவர்கள் உயிருடன் திரும்புவதில் கூட தற்பொழுது உறுதி இல்லை என குடும்பத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் படிக்க
-
” எனது கணவரின் எண்ணம் முழுவதும் இங்குதான் இருக்கும்” – துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி..
’அவரும் நானும்’ நூல் வெளியீட்டு விழாவில், “ தனக்கு கிடைத்த நேரத்தில் நூலை முழுவதுமாக படித்து, ஆலோசனை வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேரில் வர முடியவில்லை என்றாலும் என்னுடைய கணவருடைய எண்ணம் முழுவதும் இங்குதான் இருக்கும், என்னை வாழ்த்தி இங்கு அனுப்பி இருக்கிறார் எனது கணவர்” என நூல் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Fisherman Arrested in Sri Lanka: தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை மன்னார் கடற்படை முகாமில் நடைபெற்று வருகிறது.
-
நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு என் கணவர் தான் காரணம் – துர்கா ஸ்டாலின்..
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘அவரும் நானும்’ (இரண்டாம் பாகம்) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் தான் அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்று தொடங்கிய கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு 2025 ஜூலை 22 இன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 660 பிவிஎஸ்சி – ஏஎச் இடங்கள் உள்ளன, இதில் 597 இடங்கள் தமிழ்நாட்டுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பம் உள்ளிட்ட பி.டெக் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியீடு..
குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் குற்றவாளி குறித்து சரியான தகவல் வழங்கினால் ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தையும் காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க..
-
திருவள்ளூர்: 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணி..
திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். இதற்காக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து டிஎஸ்பிக்கள் உட்பட பத்து தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
-
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி குறத்த தகவல்.. ரூ. 5 லட்சம் வெகுமதி..
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் குற்றவாளியை தேடும் பணி காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றவாளி குறித்து சரியான தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 5 லட்சம் வெகுமதி கொடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Veterinary Courses Counseling : கால்நடை மருத்துவம் கலந்தாய்வு இன்று
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்கள் உள்ளன. தமிழக மாணவர்களுக்கு 597 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
VS Achuthanandan Live : திருவனந்தபுரம் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
வி.எஸ்ஸின் உடல் துக்க ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதால், நண்பகல் முதல் திருவனந்தபுரம் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநிலத்தில் பொது விடுமுறை. மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்க காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது
-
VS Achuthanandan Live Updates : அச்சுதானந்தனின் உடலுக்கு மக்கள் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல் காலை 9 மணி முதல் தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். தற்போது காவடியாரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல், காலை 9 மணிக்குள் தர்பார் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர், மதியம் துக்க ஊர்வலமாக உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.
-
பேச ஆள் இல்லாத திமுக கட்சி – ஆதவ் விமர்சனம்
திமுக குறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா, பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை அதனால்தான் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரியார் அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொள்கை என்ற ஒன்று கிடையாது. வெறும் ஊழல் மட்டும் தான் என்றார்
-
திமுகவின் ஊழல் – மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா
சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதர் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவின் ஊழல் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருகிறது என பேசியுள்ளார்.
-
புது சட்டம் – வழக்கறிஞர் சொன்னது என்ன?
இது தொடர்பாக கோர்ட்டில் பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் மற்றும் பெண்களின் நலனுக்காக புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் பள்ளிக்கல்வித் துறையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் இணைந்து செயல்படவேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.
-
மாணவிகளை பாதுகாக்க வரும் புதிய சட்டம்
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய, தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது. இந்த தகவலை தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது
-
2 நாட்கள் ஓய்வில் மு.க.ஸ்டாலின்
நேற்று, வழக்கமான காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.
-
MK Stalin Health Update : மு.க.ஸ்டாலின் உடல்நிலை – நிகழ்ச்சிகள் ரத்து
முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் இன்றும் நாளையும், அதாவது 2025 ஜூலை 22 மற்றும் ஜூலை 23 ஆகிய நாட்களில் கொங்கு மண்டலத்தில் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jagdeep Dhankar Update : ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா ஏன்?
துணை ஜனாதிபதியாக (Vice President) பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் (jagdeep dhankhar) , தனது உடல்நலக்குறைவு காரணமாக திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தற்போது 73 வயதான ஜெகதீப் தன்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்?
-
41 மெட்ரோ நிலையங்களில் நிறுத்தம்
மெட்ரோ அறிவிப்பின்படி, 2025, ஆகஸ்ட் முதல், சென்னை மெட்ரோ ரயிலின் 41 நிலையங்களிலும் சி.எம்.ஆர்.எ4ல். பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படவுள்ளது. எனினும், கியூஆர் பயணச்சீட்டு மற்றும் பிற டிக்கெட் முறை வழக்கம்போல் இயங்கும்.
-
Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் ஆகஸ்ட் 1 முதல் தேசிய அட்டைக்கு மாற்றப்படுகிறது. அதாவது சி.எம்.ஆர்.எல். அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. பழைய அட்டையிலுள்ள மீதித் தொகை மற்றும் வைப்பு தொகை புதிய அட்டைக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது
-
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை
தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ். திருச்சியில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31.7 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 31.3 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
-
குறைந்த வெயில்.. சென்னை வானிலையில் மாற்றம்
ஜூலை மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் தற்போது சென்னை வானிலை முற்றிலும் மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
-
Chennai Rains : சென்னை வெதர் நிலவரம் இதுதான்!
ஜூலை 24 2025 முதல் ஜூலை 27 2025 வரை தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Weather Today : நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
தென்னிந்தியா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்னிந்திய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஜூலை 22-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு (Rain) வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. மழை குறித்த தகவல்களை இந்த பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Mk Stalin) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 3 நாட்கள் ஓய்வு தேவை எனவும் அவர் மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளை மேற்கொள்வார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22, 23, 2025 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து அப்டேட்டுகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது. சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழக்கில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்தது குறித்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இந்த கேள்விகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜூலை 22-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணை குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.
Published On - Jul 22,2025 7:01 AM