AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PT வகுப்பை ஆசிரியர்கள் கடன் வாங்கி வகுப்பு எடுக்க கூடாது… உதயநிதி ஸ்டாலின்

Deputy Chief Minister Udhayanidhi Stalin honors student: விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் துணை முதல்வர் சான்றிதழ்கள் வழங்கினார். விடாமுயற்சி, பயிற்சி, மற்றும் மாணவர் உரிமைகளை வலியுறுத்தி உரையாற்றினார். PT நேரத்தை வகுப்புகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும், விளையாட்டு திறனை வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

PT வகுப்பை ஆசிரியர்கள் கடன் வாங்கி வகுப்பு எடுக்க கூடாது… உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jul 2025 11:32 AM IST

சென்னை ஜூலை 22: சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விடாமுயற்சி முக்கியம் என வலியுறுத்திய அவர், மாணவர்கள் தினமும் விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்றார். தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விளையாட்டும் கல்வியுமாக சமநிலை வைத்த மாணவர்கள் சிறப்படைவர் என கூறினார். முதல்வர் நலமாக உள்ளார்; அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மாணவ, மாணவியர்களை பாராட்டும் விழா

2024 – 2025 கல்வியாண்டில், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டும் விழா, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

விடா முயற்சி என்ற வெற்றி வழி

விழாவில் உரையாற்றிய அவர், “எந்த சூழ்நிலையும் வந்தாலும், விடா முயற்சியை கைவிடக் கூடாது. உங்களுக்குத் தேவையான நிதியுதவியும், விளையாட்டு வாய்ப்புகளும் தமிழக அரசு முழுமையாக வழங்கும். உங்கள் அண்ணனாக நான் என்றும் துணை நிற்பேன்,” என்று மாணவர்களுக்கு உற்சாகம் வழங்கினார்.

படிப்பும் விளையாட்டும் இரண்டும் முக்கியம்

பாடநூலில் கிடைக்காத வாழ்க்கைமுறைகள் விளையாட்டில் கற்றுக் கொள்ளப்படுகின்றன. வெறும் புத்தகங்களை படிப்பதைவிட, படிப்போடு விளையாட்டிலும் ஈடுபடுகிற மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்த உயர்வை அடைவார்கள். தினமும் பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அடிக்கடி விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் கோப்பை – ₹36 கோடி ஒதுக்கீடு

விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். அனைத்து விளையாட்டு வீரர்களும் “சாம்பியன் அறக்கட்டளையை” பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

PT period– மாணவர்களுக்கு உரிமை

பள்ளி ஆசிரியர்களிடம் அவர் வலியுறுத்தியதாவது: “PT period-ல், தயவுசெய்து ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்க வேண்டாம். இது மாணவர்கள் விளையாடும் நேரம், அவர்களது உரிமை,” என்றார். கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் இதைத் தெரிவித்த அவர், ஆசிரியர்கள் கடன் வாங்கி வகுப்பு எடுக்கும் நிலை உருவாகக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

ஒலிம்பிக் எடுத்துக்காட்டு – டெரிக் ரெட்மன்ட்

1992 ஒலிம்பிக் போட்டியில், ஓட்டத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும், தனது தந்தையின் உதவியுடன் ஓட்டத்தை முடித்த டெரிக் ரெட்மன்ட் அவர்களின் விடா முயற்சியை எடுத்துக்காட்டாக கூறினார். “வெற்றி பெறுவதே முக்கியமல்ல, முழுமையாக முயற்சி செய்வதே வெற்றிக்கு வழிகாட்டி” என மாணவர்களுக்கு பணித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார்

நிகழ்ச்சியின் முடிவில், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உடல்நலத்துக்கு எந்தவொரு கவலையும் இல்லை என்றும், அவருடைய உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.

Follow Us