அஜித்குமாரின் தம்பிக்கு மதுரை ஆவினில் வேலை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Ajith Kumar Custodial Death Case : இந்தியாவையே உலுக்கிய இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு வழங்கிய வேலையை மதுரை ஆவினுக்கு மாற்றித்தரும் முடிவு பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அஜித்குமாரின் தம்பிக்கு மதுரை ஆவினில் வேலை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

14 Jul 2025 23:16 PM

 IST

இந்தியாவையே உலுக்கிய இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் பெரியகருப்பன், மூன்று செனட் நிலமும், அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலைக்கான ஆணையும் வழங்கினார். அஜித்குமார் தாய் மாலதிக்கு, ஜூலை, 2ல் ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பன், ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.

 நவீன் குமாருக்கு மதுரை ஆவினில் வேலையை மாற்றித்தர அரசு பரிசீலனை

இந்த நிலையில் தனக்கு கிடைத்த வேலை மற்றும் வீட்டு மனை பட்டா குறித்து அஜித்குமார் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நவீன் குமாருக்கு மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலையை மாற்றித் தர பரீசிலனை செய்து வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவையும் வேறு இடத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?

மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய 27 வயது அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். மறுநாள் அவர் காவலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அடுத்து, போலீசாரின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் புகாரளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து வழக்கில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர்.

தீவிரமடையும் சிபிஐ விசாரணை

அவ்வழக்கின் விசாரணை தற்போது சிபிஐயிடம் மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தமிழக காவல்துறையிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையைத் துரிதமாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டிஎஸ்பி மோகித் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 15, 2025 அன்று முதல் மதுரை வந்து விசாரணையை தீவிரமாக ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க  : அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்

அஜித் குமாரின் உடலில் 44 காயங்களுடன் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையும், சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் வீடியோவும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்அப் மரணம் என்பது சட்டத்தின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்படுகிறது. எனவே, உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள், இந்த சிபிஐ விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Follow Us
Related Stories
மகளைக் கொன்ற இளைஞர் ஜாமீனில் விடுதலை.. 5 மாதம் காத்திருந்து பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் பயங்கரம்!!
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்