Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தாயை கொன்று தூக்கில் தொங்க விட்ட மகன் – ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!

Drunk Son Murders Mother: ஓசூர் அருகே பெட்டமுகிலாளம் கிராமத்தில், மது மற்றும் கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த மகன் பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப வன்முறை பின்னணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயை கொன்று தூக்கில் தொங்க விட்ட மகன் – ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!
ஓசூர் அருகே தாயை கொன்ற மகன்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 26 May 2025 07:10 AM

கிருஷ்ணகிரி மே 26: ஓசூர் (Hosur) அருகே பெட்டமுகிலாளம் (Pettamukhilalam) மலை கிராமத்தில் பரமசிவம் என்ற நபர், மது மற்றும் கஞ்சா போதையில் தனது பெற்ற தாயை கடுமையாக தாக்கி கொன்று, அதன் பிறகு தற்கொலை மாதிரி காட்ட வீட்டில் தூக்கில் தொங்கவைத்துள்ளார். அவரின் மனைவி குழந்தைகளுடன் விலகியதையும், தந்தையுடனும் தாயுடனும் அடிக்கடி வன்முறை நிகழ்ந்ததையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். தாயின் மரணத்தை கண்ட தந்தை, கிராம மக்களுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து பரமசிவத்தை பிடிக்க முயற்சித்தனர். அதில் தப்பிக்க, அவர் அருகிலுள்ள 50 அடி உயர மரத்தில் ஏறி பதுங்கியுள்ளார். தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தில் இருந்த பரமசிவத்தை சமாதானமாக பேசி கைது செய்தனர்.

ஓசூர் அருகே மயக்கத்தில் தாயை கொன்ற மகன்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில், மது மற்றும் கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட மகன் பரமசிவம் நடத்திய வன்முறை சம்பவம் பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடிக்கடி தகராறு – குடும்பத்தில் மோதல்

பெட்டமுகிலாளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அய்யன்துரை (67) மற்றும் அவரது மனைவி பூபதி (60) ஆகியோருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் பரமசிவம் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவி மற்றும் குழந்தைகளை வதைக்கும் நிலைக்கு சென்றதால், அவரது மனைவி பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து மது போதையில் பரமசிவம் தந்தை, தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, வன்முறையை மேற்கொண்டு வந்துள்ளார்.

தாயை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க வைத்ததால் பரபரப்பு

பரமசிவம் தனது தந்தை அய்யன்துரையுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலால் பயந்த தந்தை காட்டுப்பகுதிக்கு ஓடிவிட்டார். பின்னர் பரமசிவம் வீட்டிற்கு வந்தபோது, வேலை முடித்து வந்த தாயான பூபதியுடன் மோதல் ஏற்பட்டு, அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயை கொன்றதை மறைக்க வீட்டிலேயே தூக்கில் தொங்கவைத்து, தற்கொலை போல காட்ட முயன்றுள்ளார்.

மரத்தில் பதுங்கிய நிலையில் கைது செய்த போலீசார்

அதிர்ச்சியடைந்த அய்யன்துரை, வீட்டில் மனைவி தூக்கில் தொங்கும் காட்சியை பார்த்ததும் இது குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்தார். பரமசிவத்தை மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர் அருகிலிருந்த 50 அடி உயர கடுக்காய் மரத்தில் ஏறி பதுங்கினார். தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர் தேடலில் மரத்தில் பதுங்கிய பரமசிவத்தை சமாதானமாக பேசி கீழே இறக்கி கைது செய்தனர்.

தொடரும் விசாரணை

பரமசிவம் தந்தையை தாக்கியும், தாயை கொன்றும் விட்டதாக போலீசாருக்கு தெரியவந்த நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்துடன் நடிக்கும் நாகர்ஜுனா?
ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்துடன் நடிக்கும் நாகர்ஜுனா?...
கன்னடம் குறித்து கமலின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
கன்னடம் குறித்து கமலின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!...
உன்னி முகுந்தனின் சர்ச்சைக்கு மத்தியில் டொவினோ வெளியிட்ட பதிவு...
உன்னி முகுந்தனின் சர்ச்சைக்கு மத்தியில் டொவினோ வெளியிட்ட பதிவு......
மோஸ்ட் வாண்டட் நக்சலைட் பசவராஜு சுட்டுக்கொலை!
மோஸ்ட் வாண்டட் நக்சலைட் பசவராஜு சுட்டுக்கொலை!...
மாமன் படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு...
மாமன் படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு......
ஒருவர் இறந்த பிறகு அவரது சோஷியல் மீடியா கணக்கு என்ன ஆகும்?
ஒருவர் இறந்த பிறகு அவரது சோஷியல் மீடியா கணக்கு என்ன ஆகும்?...
ஆந்திராவில் 3 பேரை தாக்கிய போலீஸ்.. வீடியோ வெளியாகி சஸ்பெண்ட்!
ஆந்திராவில் 3 பேரை தாக்கிய போலீஸ்.. வீடியோ வெளியாகி சஸ்பெண்ட்!...
தெலுங்கு நடிகரை இயக்குவதாக வெளியான வதந்தி... மணிரத்னம் விளக்கம்
தெலுங்கு நடிகரை இயக்குவதாக வெளியான வதந்தி... மணிரத்னம் விளக்கம்...
முட்டை சாப்பிடக் கூடாத நபர்கள்.. இந்த பிரச்னை இருந்தால் கவனம்!
முட்டை சாப்பிடக் கூடாத நபர்கள்.. இந்த பிரச்னை இருந்தால் கவனம்!...
வாட்ஸ்அப்பின் புதிய Voice Chat வசதி :  நண்பர்களுடன் ஈஸியா பேசலாம்
வாட்ஸ்அப்பின் புதிய Voice Chat வசதி :  நண்பர்களுடன் ஈஸியா பேசலாம்...
சிசிடிவி கேமரா வைக்க போறீங்களா? இந்த 5 விஷயத்தை கவனிங்க!
சிசிடிவி கேமரா வைக்க போறீங்களா? இந்த 5 விஷயத்தை கவனிங்க!...