AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் சாலை சந்திப்புகளில் வருகிறது ரவுண்டானா.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்..

மதுரையில் சுரங்கப்பாதை திட்டத்தைச் செயல்படுத்துவது தென் மாவட்டங்களின் போக்குவரத்து நெரிசலுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை சுரங்கப்பாதை திட்டத்திற்கான அறிக்கையைத் தயாரித்து, பணிகளைத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது. தற்போது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என்று கூறினார்.

தமிழ்நாட்டில் சாலை சந்திப்புகளில் வருகிறது ரவுண்டானா.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்..
சாலை சந்திப்புகளில் வருகிறது ரவுண்டானா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Jan 2026 14:18 PM IST

சென்னை, ஜனவரி 24: தமிழக சட்டமன்றத்தில், அமைச்சர் எ.வ.வேலு, விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, ஐஆர்சி வழிகாட்டுதல்களின்படி சாலைச் சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நேற்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ​​பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை தொகுதி, மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் உள்ள பேரமையார் கோயில் அருகே உள்ள நான்கு வழிச் சாலைச் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஆய்வு செய்வதாக உறுதி:

இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்தச் சாலைச் சந்திப்பு, கும்பகோணம், மன்னார்குடி, அதிராம்பட்டினம் சாலையும், பாப்பானாடு, மதுக்கூர் சாலையும் சந்திக்கும் இடமாகும். ஐஆர்சி வழிகாட்டுதல்களின்படி, 30 மீட்டர் விட்டம் கொண்ட ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும். ஆனால், அங்கு 23 மீட்டர் விட்டம் கொண்ட ரவுண்டானா அமைக்க மட்டுமே இடவசதி உள்ளது. எனவே, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஆய்வு செய்த பிறகு, ரவுண்டானா அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை சந்திப்புகளில் ரவுண்டானா:

பொதுவாக, இந்த அரசு விபத்துகளைக் குறைப்பதற்காகச் சாலைச் சந்திப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. கடந்த நிதியாண்டில், ரூ.100 கோடி செலவில் சாலைச் சந்திப்புகளில் ரவுண்டானாக்கள் அமைத்து மேம்படுத்தினோம். இதன் அடிப்படையில், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, ஐஆர்சி வழிகாட்டுதல்களின்படி சாலைச் சந்திப்புகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அடுத்த நிதியாண்டில் (2026-27), முதலமைச்சருடன் கலந்தாலோசித்து, தற்போது ஆய்வு மாளிகைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அவற்றை அமைப்பதற்கான திட்டங்களை உருவாக்க முயற்சி செய்வோம் என்றார்.

இதையும் படிக்க: பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சுரங்கப்பாதை திட்டம் நிராகரிப்பு:

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் ஜி.தளபதி ஒரு துணைக் கேள்வி எழுப்பி, மதுரையில் சுரங்கப்பாதை திட்டத்தைச் செயல்படுத்துவது தென் மாவட்டங்களின் போக்குவரத்து நெரிசலுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்றும், அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கையில், நெடுஞ்சாலைத் துறை சுரங்கப்பாதை திட்டத்திற்கான அறிக்கையைத் தயாரித்து, பணிகளைத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது. தற்போது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என்று கூறினார்.

Follow Us