எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்.. அலர்ட் பயணிகளே!

Tambaram Railway Station : எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், சோழன், சேது, பாண்டியன் உள்ளிட்ட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து விரைவு ரயில்களும் 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில்  இருந்து  விரைவு ரயில்கள் இயக்கம்..  அலர்ட் பயணிகளே!

விரைவு ரயில்கள்

Updated On: 

05 Sep 2025 07:37 AM

 IST

சென்னை, செப்டம்பர் 05 : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஐந்து ரயில்களும் தாம்பரத்தில் இருந்து 2025 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணிகளின் முக்கிய போக்குவரத்து சேவையாக விரைவு ரயில்கள் இருந்து வருகின்றன. வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து பயணித்து வருகின்றனர். ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதற்கான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், எழும்பூர் ரயில் நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் அவ்வப்போது விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், தற்போது எழும்பூர் ரயில் நிலைத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், 5 முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த உத்தரவு.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை

விரைவு  ரயில் சேவையில் மாற்றம்


அதாவது, எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம், பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ரூ.735 கோடியில் இந்த பணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வருகிறது. இதனால், எழும்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்… வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

2025 செப்டம்பர் 10ஆம் தேதி நவம்பர் 10ஆம் தேதி வரை 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாண்டியன், மலைகோட்டை ராக்போர்ட், சோழன், சேது, Boat Mail ஆகிய ஐந்து விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 10ஆம் தேதி நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த ஐந்து விரைவு ரயில்களும் எழும்பூரில் இருந்து புறப்படாமல், தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் திருச்சி ராக்போர்ட் விரைவு ரயிலும், மதுரை – எழும்பூர் பாண்டியன் விரைவு ரயிலும், எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயிலும், எழும்பூர் – ராமேஸ்வரம் சேது விரைவு ரயிலும், ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயிலும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories
வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா…ரூ.5000 அபராதம்…சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!
“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!
காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?
மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!
‘ஆட்சியில் பங்கு’ தர மறுத்த முதல்வர்.. ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை.. காங்கிரஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?
சாமியார் வேடத்தில் ஜெயின் கோயில்களில் நோட்டம்..திட்டமிட்டு கிலோ கணக்கில் நகை கொள்ளை..அலேக்காக தூக்கிய போலீசார்!
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்