Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்..!

Pallavan High Speed ​​Train: 2025 மே 15 முதல், பல்லவன் அதிவிரைவு ரயில் (12605/12606) பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இது சென்னை எழும்பூர் - காரைக்குடி ரயிலுக்கு புதிய நிறுத்தமாகும். அதே நாளில், பாலருவி விரைவு ரயில் (16791/16792) தூத்துக்குடி - பாலக்காடு பாதையில் கல்லிடைக்குறிச்சி நிலையத்திலும் ஒரு நிமிடம் நிற்கும். இந்த மாற்றங்கள் பயணிகள் கோரிக்கையின்படி மேற்கொள்ளப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்..!
பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 May 2025 14:57 PM

தமிழ்நாடு மே 14: பல்லவன் அதிவிரைவு ரயில் (Pallavan Super Fast Express Train) 2025 மே 15 முதல் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இது சென்னை எழும்பூர் – காரைக்குடி இடையே இயங்கும் ரயிலுக்கு உட்பட்ட புதிய மாற்றமாகும். 12605/12606 எண் கொண்ட பல்லவன் ரயில் இரு திசைகளிலும் இந்த நிறுத்தத்தைச் சேர்க்கிறது. இத்துடன், 16791/16792 எண் கொண்ட பாலருவி விரைவு ரயிலும் (Palaruvi Express Train) மாற்றம் பெறுகிறது. தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் இந்த ரயில் கல்லிடைக்குறிச்சியில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த இரு மாற்றங்களும் 2025 மே 15 முதல் நடைமுறைக்கு வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்ணாடம் பயணிகளுக்கு இனி புதிய வசதி

சென்னை எழும்பூர் – காரைக்குடி இடையே இயங்கும் பிரபலமான பல்லவன் அதிவிரைவு ரயில் இப்போது பெண்ணாடம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2025 மே 15ஆம் தேதி வியாழக்கிழமை முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.

தினசரி சேவையில் மாற்றம்

தினமும் இயக்கப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (எண்: 12605/12606) இரு திசைகளிலும் பெண்ணாடத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த பயணிகளுக்கு இலகுவான பயண வாய்ப்பு கிடைக்கும்.

பாலருவி விரைவு ரயிலும் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்

மேலும், தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) இரு திசைகளிலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி

பல்லவன் அதிவிரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நாளை (2025 மே 15) முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்த பகுதியில் வசிக்கும் மற்றும் அங்கு இருந்து பயணம் செய்பவர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த ரயில் நின்றுவிடாததால், பயணிகள் அருகிலுள்ள பெரிய நிலையங்களுக்குச் சென்று ஏற வேண்டியிருந்தது.

இப்போது நேரடியாக பெண்ணாடத்தில் நிற்கும் வசதி அமையப்படுவதால், அதிக நேரம் மற்றும் செலவு மிச்சமாகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் ஊர்வாசிகள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்த மாற்றத்தை உற்சாகமாக வரவேற்கின்றனர். ரயில்வே துறை பயணிகள் தேவையை உணர்ந்து நடவடிக்கை எடுத்தது குறித்து நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) இரு திசைகளிலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?...
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!...
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்......
கவினின் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!
கவினின் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!...
சூப்பரான சில்லி சிக்கன் இப்படி செய்து அசத்துங்க..!
சூப்பரான சில்லி சிக்கன் இப்படி செய்து அசத்துங்க..!...
பாம்பை காண்பது நல்ல சகுனமா? - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பலன்கள்!
பாம்பை காண்பது நல்ல சகுனமா? - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பலன்கள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி... சம்பளத்தை உயர்த்தினாரா சசிகுமார்?...
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை
தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன்- சிசிடிவியால் வெளிவந்த உண்மை...
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!
மாமன் பட ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!...