பங்குச்சந்தை முதலீடு.. ஈரோட்டில் எலக்ட்ரிகல் கடை ஓனரிடம் ரூ.2.75 கோடி மோசடி

Online investment scam: ஈரோடு மின்சாதன கடை உரிமையாளர் நரேஷ்குமார் பங்குச்சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி போலியான முதலீட்டு செயலியில் ரூ.2.75 கோடி இழந்தார். அறிமுகம் இல்லாத நபரால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் முதலீடு செய்த செயலி முடக்கப்பட்டதால் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை முதலீடு.. ஈரோட்டில் எலக்ட்ரிகல் கடை ஓனரிடம் ரூ.2.75 கோடி மோசடி

பங்குச்சந்தை முதலீடு மோசடி

Updated On: 

17 Oct 2025 06:42 AM

 IST

ஈரோடு, அக்டோபர் 17: பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைகாட்டி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எலக்ட்ரிகல் கடை உரிமையாளரிடம் ரூ.2.75 கோடி மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் நரேஷ்குமார் என்பவர் எலக்ட்ரிகல் கடை ஒன்றை நடத்தி வருகிறார், இவருக்கு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பங்குச்சந்தையில் அவ்வப்போது சிறிய தொகையை முதலீடு செய்தும் வந்திருக்கிறார்.

ஆசை காட்டிய அறிமுக இல்லாத நபர்

இந்த நிலையில் 2025 ஜூன் மாதம் நரேஷ் குமாரை அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நீங்கள் தொடர்ச்சியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம். குறிப்பிட்ட ஒரு செயலியில்  முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளார்.

Also Read: ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த மோசடிக்காரர்.. முதலீட்டு மோசடியில் ரூ.15 லட்சத்தை இழந்த நபர்!

ஏற்கனவே விரைவில் அதிக பணம் பெற வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தால் நரேஷ் குமார் அந்த அறிமுகம் இல்லாத நபர் சொன்ன வார்த்தையை நம்பி கடந்த மூன்று மாதங்களாக பல தவணைகளில் சுமார் ரூபாய் 2.75 கோடி முதலீடு செய்துள்ளார். அந்த நபர் சொன்னது போல அந்த செயலியில் லாபத் தொகையும் காட்டியுள்ளது.  இந்த நிலையில் தனது பங்குச்சந்தை செயலி வாலட்டில் இருந்த ரூ.9 கோடியை சமீபத்தில் நரேஷ் குமார் விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.

முடக்கப்பட்ட செயலி

ஆனால் அது முடியாமல் போனது. இதனை தொடர்ந்து தனக்கு இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய அவர் பல்வேறு காரணங்களை கூறி ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு அவரிடம் நரேஷ் குமாரால் பேச முடியவில்லை.

அதேசமயம் நரேஷ் குமார் முதலீடு செய்த செயலியும் முடக்கப்பட்டது.  இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு  அதிகமாக இருப்பதால் இந்த புகார் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வாட்ஸ்அப் மூலம் வந்த ஆபத்து.. ஆன்லைன் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த பேராசியர்!

பங்குச்சந்தை உள்ளிட்ட எந்தவித விஷயங்களிலும் முதலீடு செய்ய விரும்பினாலும் தகுந்த ஆலோசகர்களை அணுகி அதிலிருக்கும் சாதகம், பாதகம் எல்லாம் அறிந்த பிறகு செய்ய வேண்டும். அதேசமயம் அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சில் மயங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..