AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை: செயல்படாத ஆப்… குடிநீர், கழிவுநீர் புகார் அளிப்பதில் சிக்கல்… மக்கள் அதிருப்தி

Chennai Metro Water App Failure: Chennai Metro Water App Failure: சென்னை குடிநீர் மொபைல் ஆப் செயலிழப்பு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையதள வழி புகார்களும் பயனளிக்காத நிலை காணப்படுகிறது. தொலைபேசி அழைப்புகளும் செல்லாமல் பொதுமக்கள் சிரமம் அனுபவிக்கின்றனர். புதிய ஆப் விரைவில் அறிமுகமாகும் என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: செயல்படாத ஆப்… குடிநீர், கழிவுநீர் புகார் அளிப்பதில் சிக்கல்…  மக்கள் அதிருப்தி
சென்னை குடிநீர்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Jul 2025 07:50 AM IST

சென்னை ஜூலை 19: சென்னை மெட்ரோ குடிநீர் (Chennai Metro Drinking Water) மொபைல் ஆப் (Mobile App) கடந்த 4 மாதங்களாக செயலிழந்துள்ளது. இணையதள லிங்கும் வேலை செய்யாததால் புகாரளிக்க முடியவில்லை. தொலைபேசி அழைப்புகளும் செல்லாமல் பொதுமக்கள் சிரமம் அனுபவிக்கின்றனர். தொலைபேசியில் கூட புகார் (register a complaint)  பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தனியார் டேங்கர் லாரிகளை (Private tanker trucks) நாட வேண்டிய கட்டாயம் உருவானது. இணையத்தில் புகாருகள் தீர்வு இல்லாமல் கிடப்பில் போடப்படுகின்றன. புதிய ஆப் உருவாக்கம் நடப்பில் இருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது.

சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகள் தொடர்பான புகார்

சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகள் தொடர்பான புகார்களை அளிக்கும் வகையில் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வழமையாக இந்த செயலிகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நாள்தோறும் வருவது வழக்கம். அவை நேரத்தில் தீர்வு காணப்பட்டு வந்தன. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக மொபைல் ஆப் இயங்கவில்லை என்றும், இணையதள லிங்கும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தொலைபேசியில் கூட புகார் பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

4 மாதங்களாக செயல்படாத புகார் செயலி

இதனால் குடிநீர் தேவைக்காக தனியார் டேங்கர் லாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொபைல் ஆப்பில் எளிதாக புகாரை அளிக்க இயன்றாலும், தற்போது இணையதளத்தில் பதிவு செய்யும் புகார்கள் தலைமை அதிகாரியின் கவனத்திற்கே செல்லவில்லை. 8 நாட்களில் தீர்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி பின்பற்றப்படவில்லை. சில புகார்கள் 15 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன.

குடிநீரில் கலக்கும் கழிவுகளையும் புகாரளிக்க முடியாமல் தவிக்கும் நிலை

இதற்கிடையே, சில புகார்கள் தீர்வு காண்பதற்குப் பதிலாக நேரடியாக ‘குளோஸ்’ செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரையும், குடிநீரில் கலக்கும் கழிவுகளையும் புகாரளிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு, தனி புகார் பதிவுக்கான விரிவான வசதிகள் தேவைப்படுகிறது என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Also Read: சென்னையில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

புதிய ஆப் உருவாக்கப்பட்டு வருவதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்

இது குறித்து கேள்வி எழுப்பியபோது, மெட்ரோ குடிநீர் வாரிய நிர்வாகம், தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், புதிய ஆப் உருவாக்கப்பட்டு வருவதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Follow Us