Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 09 Jan 2026 06:48 AM IST

வானிலை நிலவரம், ஜனவரி 9,2026: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, இலங்கை பொட்டுவில் கிழக்கு-தென்கிழக்கில் 250 கிலோமீட்டர் தொலைவிலும், கம்பந்தோட்டா கிழக்கு-வடகிழக்கில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், பட்டிக்கலோ கிழக்கு-தென்கிழக்கில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைலிருந்து தெற்கு-தென்கிழக்கில் 860 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை பொட்டுவில் மற்றும் திரிகோணமலை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் ஒருபுறம், தெற்கு கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 9, 2026) தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.3,000 கொடுக்கிறோம், ஓட்டுப்போட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

அதே சமயத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10, 2026 அன்று, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும்.

மேலும் படிக்க: எடப்பாடி-நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு…முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 11, 2026 அன்று கடலோரத் தமிழகத்தின் பல இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 மற்றும் 13, 2026 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி கொடையில் தொடரும் உறைபனி:

கடந்த சில தினங்களாக பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாத நிலையில், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்பாக, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 32.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.