பொளக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Tamil Nadu Weather Alert: ஜனவரி 10, 2026 தேதியான இன்று, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொளக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

10 Jan 2026 14:36 PM

 IST

வானிலை நிலவரம் – ஜனவரி 10, 2026: நேற்று (09.01.2026) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்து இன்று (10.01.2026) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை அதே பகுதிகளில், முல்லைத்தீவிற்கு (இலங்கை) கிழக்கு–தென்கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) வடக்கு–வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்திற்கு (இலங்கை) கிழக்கு–தென்கிழக்கே 140 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு–தென்கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே, முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று (10.01.2026) மதியம் அல்லது மாலை கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் 2- ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணை…பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி!

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

இதன் காரணமாக, ஜனவரி 10, 2026 தேதியான இன்று, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 16வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு!!

16 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, ஜனவரி 11, 2026 தேதியான நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12, 2026 முதல் ஜனவரி 16, 2026 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தை குறிவைக்கும் டிரம்ப்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டின் சந்திர கிரகணம் எப்போது? இதன் சிறப்புகள் என்ன?
32 விமானங்கள்... 300 விலையுர்ந்த கார்கள்... 52 தங்கப்படகுகள் - உலகின் பணக்கார மன்னர்
சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?