AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுட்டெரிக்கும் சூரியன்.. சதம் அடிக்கும் வெயில் ஒரு பக்கம்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. வானிலை ரிப்போர்ட்..

வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்.. சதம் அடிக்கும் வெயில் ஒரு பக்கம்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 May 2026 14:46 PM IST

மே 25, 2026: தமிழகத்தில் மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை:

வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அதே சமயத்தில் வெப்பம் சார்ந்த அசௌகரியமும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் கனமழை இருக்கும் ?

இது ஒரு பக்கம் இருக்க, சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளின் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக மே 25ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் தேதியைப் பொறுத்தவரையில், கோவை மற்றும் திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “எங்கே போனது சிங்கப்பெண் படை?” முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!!

அதேபோல், மே 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 30 மற்றும் 31ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் மழை தொடர்ந்து இருந்து வரக்கூடிய சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே சமயத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சென்டிமீட்டர் அளவு மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us