AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முக்கிய அறிவிப்பு..! மூன்று நாட்கள் ஆட்டோக்களுக்கு தடை… எங்கு தெரியுமா?

Tiruttani Murugan Temple: விசேஷ தினங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருத்தணி மலைக்கோவிலில் ஆட்டோக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைக்குச் செல்ல ஏதுவாகக் கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு..! மூன்று நாட்கள் ஆட்டோக்களுக்கு தடை… எங்கு தெரியுமா?
திருத்தணி முருகன் கோவில்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Apr 2026 10:05 AM IST

திருத்தணி முருகன் கோவிலில் விசேஷ நாட்களை முன்னிட்டுப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்களில் ஆட்டோக்கள் மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நுழைவுப் வாயிலில் இருந்து இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும். சூரசம்ஹாரத்திற்குப் பிறகு முருகன் சினம் தணிந்த தலம் என்பதால் இது திருத்தணி எனப்படுகிறது. இங்கு ஆண்டு நாட்களைக் குறிக்கும் வகையில் 365 மலைப்படிகள் அமைந்துள்ளன.

தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏப்ரல் 14-ம் தேதி பிறக்கவுள்ள தமிழ் புத்தாண்டு என அடுத்தடுத்த விசேஷ தினங்களை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீர் செய்யவும் ஏப்ரல் 8, 12 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகளில் மலைக்கோவில் மீது ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

பக்தர்களுக்கான போக்குவரத்து மற்றும் மாற்று வசதிகள்

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஆட்டோக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில், இட வசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து ‘படா செட்டிகுளம்’ வரை பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வழக்கம் போல் மலைக்கோவில் வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த தற்காலிக மாற்றமானது பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் விரைவான தரிசனத்தை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்…

தணிகை மலைத் தலத்தின் வரலாற்றுச் சிறப்புகள்

திருத்தணி முருகன் கோவில் புராண ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் தனது சினம் தணிந்து, அமைதி வேண்டி அமர்ந்த இடமே ‘தணிகை’ என்று அழைக்கப்படுகிறது (சினம் தணிந்த இடம் – திருத்தணி). இங்கு தான் முருகப்பெருமான் குறவர் குல மகளான வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. மற்ற தலங்களில் முருகனிடம் இருக்கும் ‘வேல்’ இங்கு இருக்காது, மாறாக இந்திரன் பரிசாக அளித்த ‘வைரவேல்’ மற்றும் அவரது கையில் ஞானச் செங்கோல் இருக்கும். மேலும், இங்குள்ள மலை 365 படிகளைக் கொண்டது, இது ஒரு ஆண்டின் நாட்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

Follow Us